ரயில்வேக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!

Published : Feb 01, 2023, 01:16 PM ISTUpdated : Feb 01, 2023, 03:32 PM IST
ரயில்வேக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!

சுருக்கம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்திய ரயில்வேக்கு ரூ.2.40 லட்சம் கோடி மூலதன ஒதுக்கீடு செய்துள்ளார். 

2013-14 நிதியாண்டில் செய்யப்பட்ட செலவீனத்தை விட, இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஒன்பது மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014 வரை, ரயில்வேயின் மூலதனச் செலவு ஆண்டுக்கு 45,980 கோடியாக இருந்தது. தற்போது நாடு முழுவதும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில், திட்ட முதலீடு அதிகரிக்கும் மற்றும் ரயில்வே கட்டமைப்பு தேசிய வளர்ச்சியின் கருவியாக வெளிப்படும்.

நரேந்திர மோடி 2.0 அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இதைக் கருத்தில் கொண்டு, 2023-24 பட்ஜெட் அறிவிப்பு, ரயில்வே போன்ற நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினருக்கு பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ரயில் பயணிகள் டிக்கெட் அல்லது சரக்குக் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் சிறந்த பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

பட்ஜெட் மதிப்பீடுகள், ஆண்டு அறிக்கைகள், வருவாய் மற்றும் இந்திய ரயில்வேக்கான ஒதுக்கீடுகள் பற்றிய விரிவான விளக்கத்தை நிதி அமைச்சர் வழங்கினார். ரயில்வே பட்ஜெட் 2023 மேக் இன் இந்தியா முயற்சியை ஊக்குவிக்கும் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்கள், முதியவர்களுக்கான புதிய சேமிப்புத் திட்டங்கள்

கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட் 2022-23ல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.1,37,000 கோடி மூலதனச் செலவீனமாக ஒதுக்கீடு செய்தார். மோடி அரசாங்கத்தின் லட்சியமான ஆத்மநிர்பர் பாரத் முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய ரயில்வே நெட்வொர்க்கின் 2,000 கிலோமீட்டர்கள் கவாச் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். இந்த அறிவிப்பு 2022-23ல் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக வெளியிடப்பட்டது. 

Income Tax Budget 2023:பட்ஜெட் 2023: வருமானவரி உச்சவரம்பு விலக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சமாக உயர்வு: முழுவிவரம்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?