nse scam news: என்எஸ்இ வழக்கில் வருமானவரி, அமலாக்கப்பிரிவு, சிபிஐ தனித்தனியாக விசாரணை: மத்திய அரசு தகவல்

Published : Apr 06, 2022, 01:05 PM IST
nse scam news: என்எஸ்இ வழக்கில் வருமானவரி, அமலாக்கப்பிரிவு, சிபிஐ  தனித்தனியாக விசாரணை: மத்திய அரசு தகவல்

சுருக்கம்

nse scam news: தேசிய பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் ஊழல் தொடர்பாக வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, சிபிஐ ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள் என நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணைஅமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

தேசிய பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் ஊழல் தொடர்பாக வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, சிபிஐ ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள் என நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணைஅமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

கோ-லொகேஷன் ஊழல்

என்எஸ்இ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, கோ-லோகேஷன் ஊழல் நடந்தது. அதாவது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே, சில குறிப்பிட்ட பங்குதரகு நிறுவனங்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன.

இதனால், பங்குவிற்பனை, விலை, பரிமாற்றம் குறித்த தகவல்கள் விரைவாக அந்த தரகு நிறுவனங்களுக்குக் கிடைத்தால், கோடிக்கணக்கில் லாபமீட்டின.இது தொடர்பான புகார் எழுந்ததையடுத்து, கடந்த 2018ம்ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வந்தது.

கைது 

இதற்கிடையே சித்ரா தனது பதவிக்காலத்தில் தனக்கு ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். அவருக்கு குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் ஊதிய உயர்வு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து செபி விசாரி்த்து, சித்ராவுக்கு ரூ.3 கோடி, ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு ரூ.2 கோடி அபராதமும் விதித்தது.

கோ-லொகேஷன் வழக்கு குறித்து விசாரித்த சிபிஐ, ஆனந்த் சுப்பிரிமணியம், சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தியது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

3 ்அமைப்புகளும் விசாரணை

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துப் பேசியதாவது: 

தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் ஊழல் வழக்கில் ஏற்கெனவே பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி விசாரணை நடத்தி முடித்து உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டது.இது தவிர இந்த வழக்கில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

பங்குச்சந்தையில் இதுபோன்ற ஊழல்கள் எதிர்காலத்தில் நடக்கா வகையில் சந்தை கட்டமைப்பு விதிகள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த சூழல்களுக்கு ஏற்ப விதிகளில் மாற்றம் கொண்டுவரப்படும். இதற்கா செபி அமைப்பு சில முக்கிய நடவடிக்கைளை எடுத்திருக்கிறது. இதன்படி, மோசடிகளைத் தடுத்தல், சந்தை புள்ளிவிவரங்களை தவறாகக் கையாளுதல் போன்றவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”  

இவ்வாறு பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?