
சென்னை - சிங்கப்பூர் இடையே புதிய விமான சேவை ..!! பயணிகள் கவனத்திற்கு ....!!!
ஏர் இந்தியா நிறுவனம் , உலகின் பல்வேறு நாடுகளுக்கு தங்களது சேவையை வழங்குகிறது. இந்நிலையில் , சென்னை - சிங்கப்பூர் இடையே ஒவ்வொரு வாரமும் 5 நேரடி விமான சேவையை அறிவித்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
அதாவது, சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் விமானம் (IX 685), சிங்கப்பூருக்கு 1.40 மணிக்கு சென்றடையும் என்றும், சிங்கப்பூரில் இருந்து 2 .40 மணிக்கு புறப்படும் விமானம் 4. 10க்கு சென்னை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவை , நவம்பர் 20ம் தேதிக்கு பிறகு தினசரி சேவையாக இயக்கப்படும். மேலும் விமானத்தில் பயணிகளுக்கு டீ, காபி, உணவு வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
தற்போது, இந்த நிறுவனம் 14 இந்திய நகரங்களில் இருந்து, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் 13 இடங்களுக்கு 21 விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.