
மிளகாய் அமோக விளைச்சல்........கொள்முதல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி ...!!!
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் அமோகமாக உள்ளதால்,விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது, ஒரு கிலோ வத்தல் 120க்கு கொள்முதல் செய்யப்படுகிறது . குறிப்பாக, மானூர் சுற்று வட்டார பகுதிகளான உக்கிரன் கோட்டை, எட்டாங்குளம், வாகைகுளம், களக்குடி, தெற்குப்பட்டி, குறிச்சிகுளம் பகுதிகளில் தற்போது மிளகாய் பறிக்கும் பணி தீவிரமாக, நடைபெற உள்ளது.
மிளகாய் வத்தல் தற்போது ஒரு குவிண்டால் 12 ஆயிரத்திற்கு மேல் விற்கப்டுவதால், ஒரு கிலோ ரூபாய் 120 விற்கு விற்கப்படுகிறது.
மற்ற மாவட்டங்களில் , வறட்சி காணப்பட்டதால், இந்த ஆண்டு இந்த நெல்லை மாவட்ட மிளகாய்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது .இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.