ஐடிஆர் தாக்கல் காலக்கெடு : இன்றைக்குள் இதை செய்ய தவறினால் ரூ.5000 அபராதம்!

Published : Nov 15, 2024, 01:29 PM ISTUpdated : Nov 15, 2024, 01:32 PM IST
ஐடிஆர் தாக்கல் காலக்கெடு :  இன்றைக்குள் இதை செய்ய தவறினால் ரூ.5000 அபராதம்!

சுருக்கம்

2023-24 நிதியாண்டுக்கான வருமான வரித் தணிக்கை காலக்கெடு நவம்பர் 15, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தணிக்கைக்கு உட்பட்ட வரி செலுத்துவோர் இந்த புதிய காலக்கெடுவை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2023-24 நிதியாண்டுக்கான வருமான வரித் தணிக்கை மற்றும் வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31, 2024 முதல் நவம்பர் 15, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி வருமான வரி தணிக்கைக்கு இன்றே கடைசி நாளாகும்.. 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானத்தை சமர்ப்பிப்பதற்கு முன், வரி செலுத்துவோர் ஒரு முழுமையான தணிக்கையை மேற்கொள்ள போதுமான கால அவகாசம் அளிக்கும் வகையில் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள், வருமான வரிச் சட்டம் அல்லது வேறு ஏதேனும் பொருந்தக்கூடிய சட்டத்தின்படி தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தனிப்பட்ட வரி செலுத்துவோர் அல்லது,  வருமான வரிச் சட்டம் அல்லது வேறு ஏதேனும் பொருந்தக்கூடிய சட்டத்தின்படி நிதிப் பதிவுகள் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிறுவனம் ஆகியோருக்கு இந்த கால அவகாசம் பொருந்தும்.

வரி தணிக்கை அறிக்கை

வருமான வரி தணிக்கைக்கு உட்பட்ட வரி செலுத்துவோர், தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்த தேதி மற்றும் ஒப்புகை எண் போன்ற தணிக்கை தொடர்பான குறிப்பிட்ட விவரங்களை அவர்களின் வருமான வரி ரிட்டனில் (ITR) வழங்க வேண்டும். இந்த விவரங்களை உள்ளிடாமல் ITR முடிக்க முடியாது. எனவே, வரி செலுத்துவோர் தங்கள் ITR ஐ தாக்கல் செய்வதற்கு முன் வரி தணிக்கையை முடிக்க வேண்டியது அவசியம்.

சேவிங்ஸ் அக்கவுண்டில் இவ்வளவு லிமிட்டை தாண்டாதீங்க.. வீட்டுக்கு ரெய்டு வரும் பாஸ்!

வருமான வரி தணிக்கை அறிக்கையை காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்க தவறிவிட்டால் வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இரண்டு சட்ட மீறல்களுக்கு வழிவகுக்கும்: அதாவது ITR ஐ தாக்கல் செய்யத் தவறியது மற்றும் வரி தணிக்கை அறிக்கையை சமர்ப்பிப்பதில் தோல்வி ஆகியவை ஆகும்.

மேலும் ஏதேனும் தாமதமான சமர்ப்பிப்புகளுக்கு அபராதம் விதிக்கப்படும், இதில் 271பி பிரிவின்படி அபராதம் மற்றும் நிலுவையில் உள்ள வரித் தொகைகளுக்கான வட்டியும் அடங்கும்.

வரித் தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவைத் தவறவிட்ட வரி செலுத்துவோர், விதிக்கப்பட்டுள்ள அபராதங்களைச் செலுத்தி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வரி தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், அவர்கள் நவம்பர் 15, 2024க்குள் ஐடிஆரைச் சமர்ப்பிக்க வேண்டும்.

2023-24 நிதியாண்டிற்கான வரி தணிக்கை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முதலில் செப்டம்பர் 30, 2024 என நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், பின்னர் அது அக்டோபர் 7, 2024 வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

15-15-15 ஃபார்முலா தெரியுமா? வேகமாக ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க இதை ட்ரை பண்ணுங்க!

நவம்பர் 15 காலக்கெடுவை தவறவிட்டால் என்ன செய்வது?

வரி செலுத்துவோர் நவம்பர் 15, 2024 ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவைச் சந்திக்கத் தவறினால், அவர்கள் டிசம்பர் 31, 2024க்குள் தாமதமான ரிட்டனைச் சமர்ப்பிக்கத் தேர்வுசெய்யலாம். இருப்பினும், இது 234A மற்றும் 234B பிரிவுகளின் கீழ் வட்டிக் கட்டணம் விதிக்கப்படுவது போன்ற பல்வேறு அபராதங்களை செலுத்த வேண்டியிருக்கும். வரி செலுத்துபவரின் வருமான அளவைப் பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், வரி தணிக்கை அறிக்கையை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறினால் ரூ. 1.5 லட்சம் வரை அல்லது மொத்த விற்பனையில் 0.5% அபராதம் விதிக்கப்படலாம்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!