
இன்றைய பொருளாதார சூழலில், தங்க நகைகள் வெறும் அலங்கார பொருளாக மட்டும் இல்லாமல், அவசர கால நிதி ஆதாரமாகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவ செலவுகள், கல்வி கட்டணங்கள், குடும்ப அவசர தேவைகள் போன்ற காரணங்களுக்காக பலரும் எளிதாக கிடைக்கும் நகை கடனை (Gold Loan) தேர்வு செய்கிறார்கள். ஆனால் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், தங்கத்தின் விலை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் புதிய விதிமுறைகள் காரணமாக, இந்த நகை கடன்கள் பலருக்கும் சுமையாக மாறி வருகின்றன. குறிப்பாக, கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் நகைகள் ஏலத்திற்கு செல்லும் அபாயம் அதிகரித்து வருவது கவலைக்குரியது.