தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது, தொடர்ந்து 2வது நாளாக விலை இன்றும் அதிகரி்த்துள்ளது.
தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை இன்றும் அதிகரி்த்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.14 உயர்ந்துள்ளது, சவரனுக்கு ரூ.112அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,736 ஆகவும், சவரன், ரூ.37,888 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் செவ்வாய்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,750ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ரூ.38,000ஆக ஏற்றம் கண்டுள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,750ஆக விற்கப்படுகிறது.
இந்த வாரம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை 2வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம்விலை கிராமுக்கு ரூ.28 அதிகரித்துள்ளது, சவரனுக்கு ரூ.224 உயர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்களுக்குப்பின், தங்கம் விலை சவரன் ரூ.38ஆயிரத்துக்கு கீழ் சரிந்து இன்று மீண்டும் சவரன் ரூ.38ஆயிரத்தைத் தொட்டது.
தங்கத்தின் விலை மாற்றத்தில் அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீத அறிவிப்பு முக்கியப் பங்கு வகிக்கும்.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 காசு அதிகரித்து, ரூ.59.00ஆகவும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.59,000 ஆகவும் அதிகரித்துள்ளது.