cryptocurrency price: அம்போ! பிட்காயின் மதிப்பு 60% வீழ்ச்சி: 18 மாதங்களில் இல்லாத சரிவு: காரணம் என்ன?

Published : Jun 13, 2022, 01:14 PM IST
cryptocurrency price: அம்போ! பிட்காயின் மதிப்பு 60% வீழ்ச்சி: 18 மாதங்களில் இல்லாத சரிவு: காரணம் என்ன?

சுருக்கம்

cryptocurrency price :கிரிப்டோகரன்ஸியில் பிட்காயின் மதிப்பு கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவு 60 சதவீதம் சரிந்துள்ளது. ஒரு பிட்காயின் மதிப்பு 25,600 டாலராகச் சரிந்துள்ளது.

கிரிப்டோகரன்ஸியில் பிட்காயின் மதிப்பு கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவு 60 சதவீதம் சரிந்துள்ளது. ஒரு பிட்காயின் மதிப்பு 25,600 டாலராகச் சரிந்துள்ளது.

உலகளவில் அதிகரித்து வரும் பணவீக்கம், குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ள பணவீக்கம் காரணமாக முதலீட்டாளர்கள் மனதில் ஏற்பட்ட அச்சம் காரணமாக பிட்காயின் மதிப்பு சரிந்துள்ளது. 

கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் பிட்காயின் மதிப்பு எப்போதும் இல்லாத வகையில் 68ஆயிரம் டாலராக உயர்ந்தது, ஆனால்,அதன்பின் 60 சதவீதம் வரை மதிப்பு குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பிட்காயின் மதிப்பு 14ஆயிரம் டாலராக சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பிட்காயினுக்கு அடுத்தார்போல் இருக்கும் எதர் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2018ம் ஆண்டு உச்சத்தில் இருந்த எதர், 8% சரிந்து 1,340 டாலராகக் குறைந்துள்ளது. 

டாஜிகாயின் மதிப்பு 0.07 டாலர் சரிந்தது, ஷிபா இனு மதிப்பு 0.2 சதவீதம் குறைந்தது. உலகளவில் கிரிப்டோகரன்ஸி சந்தை மதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் 8 சதவீதம் சரிந்து 1.08 லட்சம் கோடி டாலராகக் குறைந்தது.

கிரிப்டோவகைளில் பிற காயின்கலான ஸ்டெல்லர், யுனிஸ்வாப், எஸ்ஆர்பி, ட்ரான், டீதர், சோலனா, போல்காடாட், அவலான்ஜி, பாலிகான், செயின்லிங்க், டெரா லுனா கிளாசிக், கார்டானா, லைட்காயின் ஆகியவற்றின் மதிப்பும் கடந்த 24 மணிநேரத்தில் 15% வீழ்ச்சி அடைந்துள்ளது.

மதிப்பு சரியக் காரணம் என்ன 

அமெரிக்காவில்40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ஒருமுறை பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியது. ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை. இந்நிலையில், பணவீக்கம் உயர்ந்ததையடுத்து கடுமையாக வட்டி வீதத்தை உயர்த்த வேண்டிய நிலையில் அதாவது 50 முதல் 75 புள்ளிகள் வரை வட்டியைஉயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இதனால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்யும் நோக்கில், தங்கள் முதலீட்டை கிரிப்டோவிலிருந்து எடுத்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் கிரிப்டோ கரன்ஸி சந்தையும் ஆட்டம் கண்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் கிரிப்டோசந்தையின் மதிப்பு ஒருலட்சம் கோடி டாலர் குறைந்துள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்