பட்ஜெட் 2024: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

Published : Jan 09, 2024, 05:59 PM IST
பட்ஜெட் 2024: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

சுருக்கம்

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, சில முக்கிய விதிமுறைகள், அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்வது அவசியமாகிறது

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் மோடி அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். அந்த ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், முழு பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்வார்.

2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும். அப்போது வரவிருக்கும் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கப்படும். அது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, சில முக்கிய விதிமுறைகள் மற்றும் அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அதன் விவரம் பின்வருமாறு;

பணவீக்கம்


பணவீக்கம் என்பது ஒரு நாட்டில் பொருட்கள், சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் உயரும் வீதமாகும். பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தால், வரையறுக்கப்பட்ட பொருட்களுக்கான நுகர்வோர் வாங்கும் திறன் குறைவாக இருக்கும்.

பொருளாதார ஆய்வு


பட்ஜெட் அமர்வின் போது வெளியிடப்படும் பொருளாதார ஆய்வு, நடப்பு நிதியாண்டின் பொருளாதாரச் செயல்பாட்டின் கண்ணோட்டத்தை வழங்கும் ஒரு முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. இது வரவிருக்கும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.

நிதி மசோதா


புதிய வரிகளை விதிப்பது, வரி கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வது அல்லது ஏற்கனவே உள்ள வரிக் கட்டமைப்பைத் தொடர்வது போன்ற கொள்கைகளை அறிமுகப்படுத்த நிதி மசோதாவை ஒரு ஆவணமாக அரசாங்கம் பயன்படுத்துகிறது.

வரி வருவாய்


வரி வருவாய் என்பது உங்கள் வருமானம், பொருட்கள் மற்றும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரிகளின் மூலம் சேகரிக்கப்படும் பணத்தின் அளவு. வரி வருவாய் என்பது அரசாங்கத்தின் முதன்மையான வருமான ஆதாரமாகும்.

நேரடி வரி மற்றும் மறைமுக வரி


நேரடி வரி என்பது ஒரு தனிநபர் நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி. இது வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி இரண்டையும் உள்ளடக்கியது. மறைமுக வரி என்பது அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் ஒரு நபர் / அமைப்பு / நிறுவனத்திற்கு மக்கள் செலுத்தும் வரியாகும். ஒரு சேவைக்காக விதிக்கப்படும் ஜிஎஸ்டி, வாட், கலால் வரிகள் மறைமுக வரிகள் ஆகும்.

வருவாய் பற்றாக்குறை


வருவாய் பற்றாக்குறை என்பது அன்றாட நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் செலவழிக்கும் தொகைக்கும், வரி மற்றும் பிற ஆதாரங்களள் மூலம் அதன் மொத்த வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆகும். வருவாய் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம், வித்தியாசத்தை சமப்படுத்த மத்திய அரசு கடன் வாங்கும் என கூறப்படுகிறது.

TNGIM2024 மதுரைக்கு ஜீரோ முதலீடு: கருப்பொருளே மிஸ்ஸிங்; தூங்கிக் கொண்டிருக்கும் தூங்கா நகரம்..!

நிதிப்பற்றாக்குறை


நிதிப்பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவினங்களுக்கும் முந்தைய நிதியாண்டின் வருவாய் வரவுகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிக்கிறது. இந்த இடைவெளியைக் குறைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து கடன் வாங்குவது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி


மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது குறிப்பிட்ட நேரத்தில் இறுதிப் பயனரால் வாங்கப்பட்ட நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பண மதிப்பின் அளவீடு ஆகும்.

மூலதனச் செலவு


ஒரு நாட்டின் மூலதனச் செலவு என்பது பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய இயந்திரங்கள் மற்றும் சொத்துக்களின் வளர்ச்சி, கையகப்படுத்தல் அல்லது தேய்மானம் ஆகியவற்றிற்காக ஒதுக்குவதற்கு மத்திய அரசு முன்மொழிந்த மொத்தத் தொகைகளை உள்ளடக்கியது.

பட்ஜெட் மதிப்பீடு


பட்ஜெட் மதிப்பீடுகள் என்பது நாட்டில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் மற்றும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பிடப்பட்ட நிதி ஆகும். பணத்தை எப்படி, எங்கு பயன்படுத்த வேண்டும்; ஒரு குறிப்பிட்ட காலத்தில் என்ன செலவுகள் ஏற்படும் என்பதை இது தீர்மானிக்கிறது.

நிதிக் கொள்கை


நிதிக் கொள்கை என்பது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும். இது, நிலையான வளர்ச்சியை அடையும் பொருட்டு, வரிவிதிப்பு, பொதுக் கடன் மற்றும் பொதுச் செலவினங்களைப் பயன்படுத்தி அதன் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான நிதிக் கொள்கை முக்கியமானதாகும்.

பணவியல் கொள்கை


பொருளாதாரத்தில் பண விநியோகத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எடுத்த நடவடிக்கையைக் குறிக்கிறது. பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தைக் கண்காணிப்பது முக்கியம், இதனால் உகந்த வளர்ச்சி அடையப்படும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?