Breaking : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!!

Published : Mar 28, 2023, 10:37 AM ISTUpdated : Mar 28, 2023, 11:38 AM IST
Breaking :  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!!

சுருக்கம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி எப்) வட்டி விகிதத்தை 8.15% ஆக இபிஎப்ஓ நிர்ணயித்துள்ளது. இது நடப்பு ஆண்டுக்கான வட்டி விகித உயர்வாகும்.  

கடந்த ஆண்டு, இபிஎப்ஓ 2021-22க்கான வட்டி விகிதமாக 8.1 சதவீதம் என்று அறிவித்தது, இது கடந்த நாற்பது ஆண்டுகளில் மிகக் குறைவாக கருதப்பட்டது. கடைசியாக 1977-78ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8 சதவீதமாக  நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு முன்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது. இதைத்தான் கடந்த 2022ஆம் ஆண்டில் 8.1 சதவீதமாக குறைத்தனர். அப்போது இதற்கு கடுமையான எதிர்ப்பு வருங்கால வைப்பு நிதியாளர்களிடம் இருந்து எழுந்தது. 

தொழிலாளர்களின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக உச்சபட்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.15 சதவீதமாக உயர்த்தியதாக தெரிவித்துள்ளது.

மத்திய அறங்காவலர் குழுவின் முடிவிற்குப் பிறகு, 2022-23 ஆம் ஆண்டுக்கான டெபாசிட் மீதான வட்டி விகிதம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான தொழிலாளர் வருங்கால வைப்பி நிதி மீதான வட்டி விகிதம் இபிஎப்ஓ மூலம் ஐந்து கோடி சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பின்னரே அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய அமைப்பான இபிஎப்ஓ வட்டி விகிதத்தை அறிவிக்கும்.

2018-19 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 8.65 சதவீதத்திலிருந்து, 2019-20 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 8.5 சதவீதமாக இபிஎப்ஓ குறைத்தது. 

இபிஎப்ஓ 2016-17 ஆம் ஆண்டில், சந்தாதாரர்களுக்கு 8.65 சதவீத வட்டியும், 2017-18 ஆம் ஆண்டில், 8.55 சதவீதத்தையும் வழங்கியது. 2015-16 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் சற்று அதிகமாக 8.8 சதவீதமாக இருந்தது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்