
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் கோலாகலமாக நடந்து வருகின்றன. முகேஷ் அம்பானி குடும்பத்தில் கடைசியாக நடந்த இஷா அம்பானி - ஆனந்த் பிரமல் மற்றும் ஆகாஷ் அம்பானி - ஷ்லோகா மேத்தா ஆகியோரின் திருமணங்கள் பிரம்மாண்டமாக நடந்தன.
இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமண விழாக்கள் எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்று நாடு முழுவதும் பேசப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, குஜராத்தின் ஜாம்நகரில் அம்பானி மற்றும் மெர்ச்சன்ட் குடும்பத்தினர் கூடி, திருமணத்திற்கு முந்தைய விழாக்களுக்குத் தயாராகி வருகின்றனர். மார்ச் மாதத் தொடக்கத்தில் அவை தொடங்க உள்ளன. சமீபத்தில், நீதா அம்பானி, தனது மருமகள் ஷ்லோகா மேத்தாவுடன், ஏற்பாடுகளைப் பார்க்க விழா நடக்கும் இடத்திற்குச் சென்றிருக்கிறார்.
இளஞ்சிவப்பு நிற புடவையில் மிகவும் அழகாக இருக்கும் நீதா அம்பானி, பணியில் இருக்கும் ஊழியர்களுடன் உரையாடியுள்ளார். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்தை மறக்க முடியாத கொண்டாட்டமாக மாற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன. நீதா அம்பானி அங்கு ஊழியர்களைச் சந்தித்து, அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இனி சார்ஜர் தேவை இல்ல... மொபைலை பாக்கெட்டில் வைத்தாலே சார்ஜ் ஆகிவிடும்!
ஷ்லோகா மேத்தாவும், ஏற்பாடுகள் பற்றிய அனைத்து விவரங்களையும் நுணுக்கமாக கவனித்து வருகிறார். ஸ்லோகா ஒவ்வொரு விவரத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார். ஸ்லோகாவின் கணவர் ஆகாஷ் மற்றும் மாப்பிள்ளை ஆனந்த் ஆகியோரும் ஏற்பாடுகளைப் பார்வையிட்டுள்ளனர்.
திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மார்ச் 2024 தொடக்கத்தில், அதாவது 2 அல்லது 3 ஆம் தேதிகளில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மும்பையில் ஜூலை மாதம் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜூலை 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் திருமணச் சடங்குகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மனிஷ் மல்ஹோத்ரா முழு நிகழ்வையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. அலங்காரம் மற்றும் உணவுத் ஏற்பாட்டை கவனிக்க இரு குடும்பங்களும் ஒரு சிறப்புக் குழுவை அமர்த்தியுள்ளன. தில்ஜித் தோசாஞ்ச், அரிஜித் சிங் மற்றும் பலர் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் சுமார் 1200 பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்படுகிறது.
JEE Main Results: ஜே.இ.இ. முதன்மை தேர்வுவில் நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ் முதலிடம்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.