ரூ. 1 கோடி சம்பள வேலையை விட்டுவிட்டு, காபி தொழில் தொடங்கிய நபர்.. ஆண்டு வருமானம் எவ்வளவு?

Published : Aug 02, 2023, 09:38 AM ISTUpdated : Aug 02, 2023, 09:54 AM IST
ரூ. 1 கோடி சம்பள வேலையை விட்டுவிட்டு, காபி தொழில் தொடங்கிய நபர்.. ஆண்டு வருமானம் எவ்வளவு?

சுருக்கம்

abCoffee என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் ஒவ்வொரு இந்தியருக்கும் தரமான காபியை மலிவு விலையில் வழங்குகிறது abCoffee என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் ஒவ்வொரு இந்தியருக்கும் தரமான காபியை மலிவு விலையில் வழங்குகிறது

இந்தியாவில் உள்ள மக்களுக்கு சிறப்பு காபியை அணுகுவதற்கான ஒரு பணியைத் தொடங்குவதற்கு ஒரு நபர் தனது அதிக சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டார். அசைக்க முடியாத உறுதியுடன், அவர் காபி துறையில் புரட்சியை ஏற்படுத்துவதையும், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு காபி பிரியர்களையும் அடையும் வகையில் பிரீமியம் காபியின் செழுமையான சுவைகளை கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். யார் அவர்? அப்படி என்ன செய்தார்? விரிவாக பார்க்கலாம்..

அந்த நபர் பீகாரைச் சேர்ந்த அபிஜீத் ஆனந்த். abCoffee தொடங்குவதற்கு 1 கோடி சம்பளம் வாங்கிய வேலையை விட்டுவிட்டார். அவர் தொடங்கிய abCoffee என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் ஒவ்வொரு இந்தியருக்கும் தரமான காபியை மலிவு விலையில் வழங்குகிறது. 2022 இல் செயல்படத் தொடங்கிய அந்நிறுவனம்,  மும்பை, டெல்லியில் பல கிளைகளை கொண்டுள்ளது.

abCoffee இல் உள்ள காபியின் விலை ₹77 இல் தொடங்குகிறது. மற்ற நாட்டு சிறப்பு காபி கடைகளை விட மூன்றில் ஒரு பங்கு குறைவான விலையில் abCoffee சிறப்பு காபிகளை விற்கிறது. abCoffee ல் Cappuccino விலை ரூ.97 (250 மில்லி) தொடங்குகிறது. இதன் மூலம் அந்நிறுவனம் ஆண்டுக்கு 1.8 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

இதுகுறித்து பிரபல செய்தி ஊடகத்திடம் பேசிய அவர் “ abCoffee ஐத் தொடங்குவதற்கு முன்பு, நான் ருமேனியாவில் பெட்ரோலியத் துறையில் பணிபுரிந்தேன், ஆண்டுக்கு 160,000 டாலர்கள் சம்பாதித்தேன். நான் அங்கு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக நான் 2021ல் இந்தியாவுக்கு திரும்பினேன். இந்திய காபி சந்தையில் நான் கண்ட இடைவெளியுடன் இணைந்து நாட்டின் சில சிக்கலான பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற ஆர்வமும் எனது வேலையை விட்டுவிட்டு abCoffee ஐ தொடங்குவதற்கு வழிவகுத்தது.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ நான் முதலில் ஒரு தொழிலதிபராக ஆக விரும்பவில்லை. நான் பீகாரைச் சேர்ந்தவன். பீகாரில், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு பொறியாளர், மருத்துவர் அல்லது ஐஏஎஸ் ஆகிய மூன்று தொழில் தேர்வுகள் மட்டுமே உள்ளன. அதனால், நான் இன்ஜினியர் ஆனேன், ஐஐடிக்குச் சென்று, பெட்ரோலியத் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் 8.5 வருடங்கள் வேலை செய்தேன்.

தொழில்முனைவு என்பது பிரச்சனைகளைத் தீர்க்கும், வேலைவாய்ப்பைக் கொடுக்கும், மேலும் ஒரு நாட்டின் வளர்ச்சிக் கதையில் ஒரு முக்கிய புள்ளியாக மாறும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். இது என்னை இறுதியில் ஒரு தொழிலதிபராக ஆக்கியது.” என்று கூறினார்.

தான் காபி தொழிலை தொடங்கியது குறித்து பேசிய அவர் “ பிப்ரவரி 2021 இல், நான் இந்தியாவுக்குத் திரும்பியபோது, இங்குள்ள வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும்போது, காபிக்காக மாதம் 20,000 செலவு செய்தேன். அப்போதுதான் ஒரு இடைவெளி இருப்பதை உணர்ந்தேன். ஒரு நபரை வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றும் சில குணாதிசயங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன். 

ஒவ்வொரு வணிகமும் மக்களின் வணிகம் என்று நான் நம்புகிறேன். அனைத்தையும் விட ஆர்வம் முக்கியம். வணிகம் அல்லது வேலை எதுவாக இருந்தாலும், ஆனால் உங்களுக்கு ஆர்வம் இல்லையென்றால், வெற்றி பெறுவது என்பது சாத்தியமற்றது.” என்று தெரிவித்தார்.

இன்ஜினியராக இருந்து விவசாயியாக மாறிய நபர்.. சில ஆண்டுகளிலேயே கோடீஸ்வரராக மாறியது எப்படி?

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!