வீட்டில் Money Plant இருக்கா? இதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.. இல்லன்னா சிக்கல்..

Published : Aug 04, 2023, 07:28 AM ISTUpdated : Aug 05, 2023, 11:18 AM IST
வீட்டில் Money Plant இருக்கா? இதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.. இல்லன்னா சிக்கல்..

சுருக்கம்

 துளசி மற்றும் ஷமி போன்ற பிற செடிகளுடன், வீட்டிற்குள் இருக்கும் பணச்செடி (Money Plant)மங்களகரமானதாக கருதப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரம் இந்து மத நம்பிக்கையின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது.  வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு வீட்டிலும் எதிர்மறை மற்றும் நேர்மறை இரண்டுமே இருக்கும். இந்த ஆற்றல்கள் மக்களின் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே நமது வீட்டிற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வது முக்கியம். வாஸ்து மூலம் வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன், எதிர்மறை ஆற்றலை அகற்ற முடியும். அந்த வகையில் வீட்டில் நீங்கள் வளர்க்கும் தாவரங்களுக்கும் வாஸ்து விதிகள் பொருந்தும். 

 துளசி மற்றும் ஷமி போன்ற பிற செடிகளுடன், வீட்டிற்குள் இருக்கும் பணச்செடி (Money Plant)மங்களகரமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த செடிகளை வீட்டில் வைக்கும் போது அதை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஜோதிடரும் வாஸ்து ஆலோசகருமான ஹிதேந்திர குமார் சர்மா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 பணச்செடிகளை எப்போதும் வீட்டின் தென்கிழக்கு திசையில் அதாவது அக்னி மூலையில் நட வேண்டும். இது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த திசை புதன் கிரகத்தின் திசை என்றும் குறிக்கப்படுகிறது. விநாயகப் பெருமானே இந்தத் திசையின் கடவுள் என்றும், இந்தத் திசையில் ஒரு பணச் செடியை வளர்ப்பது சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

பணச் செடிகளை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கக் கூடாது. இந்த திசை வியாழனின் திசை என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக, வீட்டின் வடகிழக்கு மூலையில் பணச் செடியை வைத்திருப்பது எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது. கூடுதலாக, வீட்டின் மேற்கு மற்றும் கிழக்கு திசைகளில் பணச்செடிகளை வளர்ப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் நம்பப்படுகிறது. இந்த திசையில் பணச்செடிகளை வைத்தால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். 

பணச்செடி வளரும் போது, அதன் இலைகள் தொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் வைத்திருக்கும் பணச் செடி ஒருபோதும் காய்ந்து போகக்கூடாது. பணச்செடியின் இலை வறண்டு போனால், அது வீட்டின் பொருளாதார நிலைக்கு நல்லதல்ல என்று நம்பப்படுகிறது. எனவே நீங்களும் உங்கள் வீட்டில் பணச்செடியை வைத்திருந்தால் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி - சந்திரன் சேர்க்கை : இந்த 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
Thulam Rasi Palan Dec 06: துலாம் ராசி நேயர்களே, இன்று இதை மட்டும் பண்ணிடீங்க வெற்றி உங்களுக்குத்தான்.!