இதுதாங்க உலகத்துல ரொம்ப சின்ன பூங்கா.. எங்கு இருக்கு தெரியுமா..?

By Kalai SelviFirst Published Dec 30, 2023, 3:11 PM IST
Highlights

நாம் வாழும் இடத்தை சுற்றி பல பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்கா நகரில் உள்ள அனைவரையும் ஈர்க்கிறது. பூங்காவில் சில செடிகளையும் மரங்களையும் பார்க்கலாம். ஆனால் உலகின் மிகச்சிறிய பூங்காவின் சிறப்பு என்ன என்பது பற்றிய தகவல் இங்கே..

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுவது பூங்கா. இங்கு மக்கள் பலர் காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி செல்வார்கள். பூங்காவின் சூழல் மிகவும் அமைதியாக இருப்பதாலும், சுத்தமான காற்று கிடைப்பதாலும் மக்கள் பூங்காவை சுற்றி நடக்க விரும்புகிறார்கள். குழந்தைகள் பூங்காவிற்கு விளையாடச் செல்கிறார்கள், பெரியவர்கள் நடைபயிற்சி அல்லது சில நண்பர்களைப் பார்க்கச் செல்கிறார்கள். வீட்டிலும் வேலையிலும் மன அழுத்தம் உள்ளவர்கள் பூங்காவிற்கு வந்து ஓய்வெடுக்கவும், சிறிது நேரம் அமைதியை தேடி பூங்கா செல்கிறார்கள்.

சில பூங்காக்கள் பெரியதாகவும் சில சிறியதாகவும் இருக்கும். நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஒரு சிறிய இடம் அங்கு இருக்கும். மேலும் பூங்காவில் சில செடிகள் மற்றும் மரங்கள் கூட இருக்கும். ஆனால் உலகிலேயே மிகச்சிறிய பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்கா மிகவும் சிறியதாக இருப்பதால், அங்கு உட்காரவோ நடக்கவோ முடியாது. உலகின் மிகச்சிறிய பூங்கா பற்றிய சில தகவல்களை குறித்து இப்போது இங்கு பார்க்கலாம்.

Latest Videos

உலகின் மிகச்சிறிய பூங்கா இதுதான்: கின்னஸ் உலக சாதனை அறிக்கையின்படி, உலகின் மிகச்சிறிய பூங்காவில் ஒரே ஒரு செடி மட்டுமே உள்ளது. இந்த பூங்காவின் பெயர் 'மில் எண்ட்ஸ் பார்க்' (Mill Ends ParkMill Ends Park). மில் எண்ட்ஸ் பார்க் அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் அமைந்துள்ளது. 

இதையும் படிங்க:  பாகிஸ்தானில் காரில் ஜன்னல் வழியாக இயற்கையை ரசிக்கும் சிங்கம்.. வீடியோ வைரல்!

கின்னஸ் உலக சாதனை பூங்கா: இது முதன்முதலில் 1948 இல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில், இந்த பூங்கா உலகின் மிகச்சிறிய பூங்காவாக கின்னஸ் உலக சாதனையில் நுழைந்தது.

இதையும் படிங்க: அட கொடுமையே! புகைப்படத்தில் வளர்ப்பு மகனை நீக்க 'ஐடியா' கேட்ட மாற்றாந்தாய்..! 

இந்த பூங்காவை நிறுவியது யார்? : மில் எண்ட்ஸ் பார்க் என்று பெயரிடப்பட்ட இந்த சிறிய பூங்கா 1946 இல் டிக் ஃபேகன் என்பவரால் நிறுவப்பட்டது. டிக் ஃபகன் இராணுவத்தில் இருந்தார். இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், அவர் ஓரிகானுக்குத் திரும்பினார். அவரும் சும்மா உட்காரவில்லை. ஓரிகான் ஜர்னலில் பத்திரிகையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். அலுவலகம் முன்பு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அங்கு மின்விளக்கு கம்பம் நடும் பின்னணியில் குழி தோண்டப்பட்டது. ஆனால் மின்விளக்கு கம்பம் அமைக்கப்படவில்லை. இந்நிலையில், மின்விளக்குக் கம்பம் அமைக்கப்பட வேண்டிய இடத்தில் மரம் நடுவதற்கு டிக் ஃபகன் முடிவு செய்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

டிக் ஃபகன், இந்த நேரத்தில் செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார். நகரத்தில் உள்ள பல்வேறு பூங்காக்கள் பற்றி எழுதி வந்தார். பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில், ஒரே ஒரு செடியைக் கொண்ட இந்த பூங்காவைப் பற்றி நான் தெரிவிக்க ஆரம்பித்தேன். இந்த பூங்கா மில் எண்ட்ஸ் என்றும் பெயரிடப்பட்டது. ஃபகன் 1969 இல் இறந்தார். ஆனால் அதுவரை இந்தப் பூங்காவைப் பற்றி அவர் தொடர்ந்து எழுதினார். இது ஐரிஷ் விசித்திரக் கதைகளின் கதாபாத்திரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு வண்ணத்துப்பூச்சிகள் பந்தயம் நடப்பதாக நம்பப்பட்டது. 2006ல், கட்டுமான பணி காரணமாக, பூங்கா சில நாட்களுக்கு மாற்றப்பட்டது. இந்த சிறிய பூங்கா, 2 அடி அகலம் மட்டுமே உள்ளது. இந்த மிகச் சிறிய பூங்கா மொத்த பரப்பளவு 452 சதுர அங்குலங்கள் ஆகும்.

click me!