யார் இந்த முஜிபுர் ரஹ்மான்? வங்கதேசத்தில் இவரது சிலைகள் உடைக்கப்படுவது ஏன்?

By SG BalanFirst Published Aug 5, 2024, 8:30 PM IST
Highlights

ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1970 களின் முற்பகுதியில் வங்கதேசத்தில் பிரபலமான தலைவராக இருந்தார். அதற்கு முன் பிரிட்டிஷ் மற்றும் பாகிஸ்தான் ஆட்சியின் கீழ் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்தார். ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் பல நாடுகளுடன் நல்ல உறவுகளை உருவாக்க முயன்றார். நட்புக் கொள்கையை ஊக்குவித்து, விரோதத்தைத் தவிர்த்தார்.

வங்காளதேசத்தில் நடந்த போராட்டங்களுக்கு மத்தியில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாதுகாப்புக்காக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 15, 1975 அன்று தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நாடுகடத்தப்பட்டார்.

வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்படும் முஜிபுர் ரஹ்மான், அவரது இல்லத்தைச் சுற்றி வளைத்துத் தாக்கிய வங்கதேச ராணுவ வீரர்கள் குழுவால் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை வங்கதேச அரசியலில் முதல் முறையாக ராணுவத் தலையீட்டால் நடந்தது.

Latest Videos

வர்த்தக மந்திரியாக இருந்த கோண்டேகர் மோஸ்டாக் அகமது அதிகாரத்தைக் கைப்பற்றினார். இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக தன்னை அறிவித்தார். ஆகஸ்ட் 15, 1975 முதல் நவம்பர் 6, 1975 வரை அவர் பதவி வகித்தார்.

முஜிபுர் ரஹ்மான் அரசியல் வாழ்க்கை முழுவதும், ஏப்ரல் 1971 முதல் படுகொலை செய்யப்படும் வரை வங்கதேசத்தின் பிரதமராக பணியாற்றினார். 1970 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் நடந்த பொதுத் தேர்தலில், ஷேக் முஜிப்பின் அவாமி லீக் கட்சி, அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் வென்றது. அந்த கிழக்கு பாகிஸ்தான் தான் பின்னர் வங்கதேசமாக மாறியது.

உ.பி. காசியாபாத்தில் தரையிரங்கிய ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர்! இந்தியாவில் தஞ்சம் அடைகிறாரா?

வங்கதேசம் சுதந்திரம் அடைந்த பிறகும் பாகிஸ்தான் ராணுவம் அதிகாரத்தை ஒப்படைக்க தாமதித்தது. அப்போது முஜிபுர் ரஹ்மான் நிலைமையை திறமையாக நாட்டை வழிநடத்தினார். 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் தொடக்கத்தில், மார்ச் 25 அன்று பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 16 அன்று பாகிஸ்தான் படைகள் சரணடைந்த பிறகு, முஜிபுர் ரஹ்மான் லண்டனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் பறந்து வங்கதேசம் திரும்பினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மூன்றாண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.

முஜிப்பின் மருமகன் ஷேக் ஃபஸ்லுல் ஹக் மானி அரசாங்கத்தில் உயர் பதவிகளைப் பெற்றார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவுடனான தனியார் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், முஜிபுர் ரஹ்மான் ஒப்புதலுடன் ஹக் இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.

முஜிபுர் ரஹ்மானின் சகோதரர் ஷேக் நசீர் தென்கிழக்கில் கடத்தலில் ஈடுபட்டார் என்றும், அவரது மனைவி உலக வங்கி ஒப்பந்தங்களில் லாபம் ஈட்டினார் என்றும், அவரது மகன் ஷேக் கமால் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என்றும், அவரது மருமகன் ஷேக் மோனி அதிகாரத்தையும் செல்வத்தையும் வேகமாகக் குவித்தார்.

ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1970 களின் முற்பகுதியில் வங்கதேசத்தில் பிரபலமான தலைவராக இருந்தார். அதற்கு முன் பிரிட்டிஷ் மற்றும் பாகிஸ்தான் ஆட்சியின் கீழ் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்தார். ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் பல நாடுகளுடன் நல்ல உறவுகளை உருவாக்க முயன்றார். நட்புக் கொள்கையை ஊக்குவித்து, விரோதத்தைத் தவிர்த்தார்.

முஜிப்பின் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்ட நான்கு ராணுவப் பிரிவுகள் டாக்காவில் அவரது இல்லத்திற்குள் நுழைந்து தாக்கின. இந்த மோதலைத் தொடர்ந்து முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார். கர்ப்பிணி மருமகள் உட்பட அங்கிருந்த அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களைக் கொலை செய்தனர்.

இந்தத் தாக்குதலின் போது, ​​ஹசீனா வெளிநாட்டில் இருந்தார், அடுத்த ஆறு வருடங்கள் வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்திருந்த ஷேக் ஹசீனா, பின்னர் தனது தந்தை உருவாக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கிற்கு தலைவராகத் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னையில் எங்க பாத்தாலும் Zero is Good! எதுக்காக இப்படி விளம்பரம் பண்ணுறாங்க தெரியுமா?

click me!