கொரானா வைரஸுக்கு சீனா நிச்சயம் பதிலளிக்க வேண்டும்... WHO உறவை ஒட்டுமொத்தமாக துண்டித்த அமெரிக்கா..!

By Thiraviaraj RMFirst Published May 30, 2020, 10:11 AM IST
Highlights

கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டதால், உலக சுகாதார மையத்துடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். 

நாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகிறோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டதால், உலக சுகாதார மையத்துடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்துவதாக முதலில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஜெனீவாவை தளமாக கொண்டு செயல்படும் உலக சுகாதார மையம், சீனாவின் கைப்பாவை போல் செயல்பட்டது என்று குற்றச்சாட்டிய டிரம்ப், தொடர்ந்து, கணிசமான முன்னேற்றங்களை எடுக்கா விட்டால் நிதி முடக்கம் நிரந்தரமாகிவிடும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ’’நாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகிறோம். இதனால் அவர்களுக்கு இனி நாங்கள் நிதி வழங்க மாட்டோம். உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் நிதியை நாங்கள் அப்படியே வேறு நாடுகளுக்கும், அவசர பொது சுகாதாரத் தேவைகளுக்கும் பயன்படுத்த போகிறோம். வைரஸ் குறித்து சீனா உலகிற்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும். அதில் நமக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை மேற்கொண்டு வந்தது. கடந்த ஆண்டு மட்டும் குறைந்தது 400 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியது.

இதனிடையே, இந்த வார தொடக்கத்தில், ஐ.நா. சுகாதார நிறுவனம் தனியார் நன்கொடைகளுக்காக சுயாதீனமாக இயங்கும் ஒரு புதிய அடித்தளத்தை அறிமுகப்படுத்தியது, இது கொரோனா வைரஸ் நெருக்கடி போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் மனிதநேய மற்றும் பொது நன்கொடைகளை செலுத்துவதற்கு அதிக கட்டுப்பாட்டைக் கொடுக்கும் என்று அந்த அமைப்பு நம்புகிறது.

உலக சுகாதார மையத்தின் வரவுசெலவுத் திட்டத்தின் பெரும்பான்மையானது தன்னார்வ பங்களிப்புகளில் உள்ளது, அவை நாடுகளிலிருந்தும் பிற நன்கொடையாளர்களிடமிருந்தும் அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்கு நேராக செல்கின்றன. ஆகவே, உறுப்பு நாடுகளின் நாடுகளின் "மதிப்பிடப்பட்ட பங்களிப்புகளின்" செலவினங்களின் மீது மட்டுமே உலக சுகாதார அமைப்பு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது, அவை அவற்றின் செல்வம் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.

click me!