உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு முழு ஆதரவு வழங்கும் வடகொரிய அதிபர்!

Published : Jun 12, 2023, 12:20 PM IST
உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு முழு ஆதரவு வழங்கும் வடகொரிய அதிபர்!

சுருக்கம்

உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான ரஷ்ய அதிபர் புடினின் முடிவை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆதரவு தெரிவித்துள்ளார்.  

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் "கைகோர்ப்பதாக" உறுதியளித்துள்ளார். மேலும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு தனது நாட்டின் "முழு ஆதரவையும் ஒற்றுமையையும்" வழங்குவதாக அரசு ஊடகம் KCNA தெரிவித்துள்ளது.

ஒரு சக்திவாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களின் இலக்கை வெல்ல, எங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதாக அவர் உறுதியளித்தார்.

ரஷ்யாவின் தேசிய தினத்தை முன்னிட்டு கிம் ஜாங் உன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். வடகொரியா தலைநகர் பியோங்யாங்குடன் நட்புறவைப் பேணும் ஒரு சில நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துச் செய்தியுடன், உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் முடிவை கிம் ஜாங் உன் ஆதரவு தருவதோடு, முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வட கொரிய மக்கள், "ஏகாதிபத்தியம் மற்றும் தன்னிச்சையான தன்மைக்கு எதிராக தங்கள் நாட்டின் இறையாண்மை, உரிமைகள், வளர்ச்சி மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான புனிதமான நோக்கத்தை செயல்படுத்துவதற்கான அவர்களின் முழுப் போராட்டத்தில் ரஷ்ய மக்களுக்கு முழு ஆதரவையும் ஒற்றுமையையும் வழங்குகிறார்கள். என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு எதிராக மைக் பென்ஸ்... யார் இவர்?

நீதி வெற்றி பெறுவது உறுதி என்றும், ரஷ்ய மக்கள் வெற்றி பெற்று வரலாற்றில் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள் என்றும் கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவுடன் "நெருக்கமான ஒத்துழைப்புக்கு" கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்தார், "ஒரு சக்திவாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்திற்கு இணங்க, ரஷ்ய அதிபருடன் உறுதியாக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

வட கொரியா, கிரெம்ளினுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க முற்பட்டது. மற்றும் உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் கடந்த ஆண்டு மாஸ்கோவுக்கும் ஆதரவுக்கரம் நீட்டியது. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் "மேலதிகாரக் கொள்கை" மற்றும் "ஏகாதிபத்யம்" ஆகியவற்றைக் வடகொரியா குற்றம் சாட்டியது.

உக்ரேனில் போர் தொடங்கியதில் இருந்து மாஸ்கோவிற்கு பியோங்யாங்கில் இருந்து கிடைக்கும் ஆதரவு குறித்த சமீபத்திய செய்தி இதுவாகும்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!