Sri Lanka: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்!!

Published : Jul 13, 2022, 10:18 AM ISTUpdated : Jul 13, 2022, 03:51 PM IST
Sri Lanka:  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்!!

சுருக்கம்

அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இரவே ராணுவ விமானத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் மாலத்தீவு சென்றடைந்தார். 

இலங்கையில் இருந்து செல்வதற்கு அனுமதித்தால்தான் பதவியை ராஜினாமா செய்வேன் என்று முட்டுக்கட்டை போட்டு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று  இரவே ராணுவ விமானத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் மாலத்தீவு சென்றடைந்தார். மாலேவில் இருக்கும் வெலனா விமான நிலையத்தில் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொழும்பு விமான நிலையத்தில் இருந்து ராணுவ விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். நேற்று இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த முன்னாள் நிதியமைச்சரும், கோத்தபய ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சேவும் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார். இதற்கு முன்னதாக அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அந்த நாட்டு விசா மறுத்தது என்று கூறப்பட்டு இருந்தது. 

Sri lanka Crisis : இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்!

இலங்கையின் ராணுவ அமைச்சகத்துக்கும் கோத்தபய ராஜபக்சே பொறுப்பு வகித்தால், நேற்று இரவு விமானப் படையிடம் விமானம் பெற்று மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து இன்று ரணில் விக்ரமசிங்கேவும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. போராட்டக்காரர்கள் கொழும்பில் இருக்கும் பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். இவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. 

போராட்டக்காரர்கள் தொடர்ந்து அந்த நாட்டின் தொலைக்காட்சியையும் கைப்பற்றி, ஒளிபரப்பை முடக்கினர். வரும் 20ஆம் தேதி அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். அதுவரை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரணில் ராஜினாமா செய்ய வேண்டும் என்றுதான் இன்று போராட்டக்காரர்கள் போர்க்கொடி தூக்கி இருந்தனர்.

sri lanka crisis: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவியதா?

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி
எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்.. காணாமல் போன டிரம்ப் புகைப்படம்.. வெளியான முக்கிய ஆதாரம்