எதிர்வரும் தேர்தல்.. துணை பிரதமரிடம் பொறுப்பை ஒப்படைப்பேன்.. சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவிப்பு - முழு விவரம்!

Ansgar R |  
Published : Nov 05, 2023, 02:27 PM IST
எதிர்வரும் தேர்தல்.. துணை பிரதமரிடம் பொறுப்பை ஒப்படைப்பேன்.. சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவிப்பு - முழு விவரம்!

சுருக்கம்

Singapore News : வருகின்ற 2025 நவம்பரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பேன் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

ஆளும் மக்கள் செயல் கட்சியின் (பிஏபி) மாற்றத் திட்டங்கள் மேலும் வெளிச்சம் பெரும்பொருட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளரான திரு லீ, “எல்லாம் சரியாக நடந்தால்”, அடுத்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி பிஏபியின் 70வது பிறந்தநாளில் அதைச் செய்வார் என்று இன்று நவம்பர் 5ம் தேதி ஆற்றிய உரையில் அவர் இது குறித்து கூறினார்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற வருடாந்திர PAP விருதுகள் மற்றும் மாநாட்டில், கலந்து கொண்ட திரு. வோங், துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் மற்றும் பல புதிய PAP முகங்களின் உரைகளைத் தொடர்ந்து திரு. லீ 1,000க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றினார். 62 வயதான திரு. ஹெங் ஒதுங்கிய பின்னர், "நீண்ட பயணத்தை மேகொள்ளவுள்ள" ஒரு இளைய தலைவர் பொறுப்பேற்க முடியும் என்று கடந்த ஆண்டு கட்சியின் நான்காவது தலைமுறை அல்லது 4G குழுவின் தலைவராக திரு. வோங் அங்கீகரிக்கப்பட்டார்.

இமயமலை பகுதியில் எப்போது வேண்டுமானாலும் 'பெரும் நிலநடுக்கம்' ஏற்படலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை!

கடந்த பிப்ரவரி 2022ல் தனது 70 வது பிறந்தநாளுக்கு முன்னதாக பதவி விலகுவேன் என்று நம்புவதாக திரு. லீ முன்பு கூறினார். இருப்பினும், தொற்றுநோயால் அந்த திட்டம் சீர்குலைந்தது. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய தினப் பேரணியின் போது, ​​கோவிட்-19 தொற்றுநோய் முடிவுக்கு வந்தவுடன் தனது கனவு திட்டங்கள் மீண்டும் துவங்கும் என்றும், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய சர்ச்சைகள் அரசியல் புதுப்பித்தலுக்கான கால அட்டவணையை தாமதப்படுத்தாது என்றும் கூறினார். 

''பயங்கரவாத தாக்குதல் முதல்.. கடும் வானிலை வரை".. 2024ம் ஆண்டுக்கான பாபா வாங்காவின் கணிப்புகள் - உண்மையா?

இன்று ஞாயிற்றுக்கிழமை, திரு. லீ PAP உறுப்பினர்களிடம், அடுத்த GE 4G குழுவிற்கு கட்சியின் தலைமை மாற்றத்துடன் ஒத்துப்போகும் என்று மீண்டும் வலியுறுத்தினார். 4G குழுவின் தலைவராக திரு. வோங்கின் ஒப்புதலுடன், ஒரே ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்: அது அடுத்த GE-க்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ ஒப்படைப்பு நடைபெறுமா என்பது விரவாயில் அறிவிக்கப்படும் என்றார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!