இஸ்ரேல் ஹமாஸ் போர்.. ஈவென்ட் நடத்த எந்த அனுமதியும் இல்லை.. தேவையின்றி ஒன்றுகூட வேண்டாம் - சிங்கப்பூர் போலீஸ்!

Ansgar R |  
Published : Nov 05, 2023, 08:16 AM IST
இஸ்ரேல் ஹமாஸ் போர்.. ஈவென்ட் நடத்த எந்த அனுமதியும் இல்லை.. தேவையின்றி ஒன்றுகூட வேண்டாம் - சிங்கப்பூர் போலீஸ்!

சுருக்கம்

Singapore News : சிங்கப்பூரில் மக்கள் தங்கள் கருத்துக்களை பேச Speakers Corner என்ற இடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் - ஸ்பீக்கர்ஸ் கார்னரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான நிகழ்வுகளை நடத்த ஒன்றுகூடுமாறு சில ஆன்லைன் விளம்பரங்கள் வந்துள்ளது.

இந்நிலையில் அந்த குறிப்பிட்ட இடத்தில் சிங்கப்பூர் போலீஸ் மற்றும் தேசிய பூங்கா வாரியம் (NParks), மேற்குறிய நிகழ்வு குறித்து எந்தவித விண்ணப்பத்தையும் அங்கீகரிக்கவில்லை என்று சிங்கப்பூர் போலீஸ் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. ஆகவே தேவையின்றி மக்கள் யாரும் அங்கு கூடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

சில சமூக ஊடக தளங்களில் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுவது குறித்து தங்களுக்குத் தெரியவந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர். சிங்கப்பூரில் பொதுக் கூட்டங்கள் நடைபெறுவது, சிங்கப்பூரின் பொது ஒழுங்குச் சட்டம் 2009ன் கீழ் கட்டுப்படுத்தப்படுவதாகவும், காவல்துறை அனுமதியின்றி பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்வது அல்லது பங்கேற்பது சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் அவர்கள் தங்கள் Facebook பதிவில் தெரிவித்தனர்.

19 நோயாளிகளுக்கு அதிக இன்சுலின் கொடுத்து கொன்ற கொலைவெறி நர்ஸின் ஷாக்கிங் வாக்குமூலம்!

"மற்ற நாடுகள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களின் அரசியல் காரணங்களுக்காக வாதிடும் கூட்டங்களுக்கு காவல்துறை எந்த அனுமதியையும் வழங்காது, அது தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும் மற்றும் பொது ஒழுங்கு சீர்கேடு சம்பவங்களுக்கு வழிவகுக்கும்" என்றும் அவர்கள் கூறினர். "உயர்ந்த பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற நிகழ்வுகளுடன் தொடர்புடைய பொது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவலைகள் இருப்பதாக காவல்துறை மதிப்பிட்டுள்ளது.

 

அதிகரிக்கும் போர் பதட்டம்.. "USSR போலவே அமெரிக்காவும் சரியும்" - ஹமாஸின் மூத்த அதிகாரி அலி பராக்கா எச்சரிக்கை!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதற்கான விண்ணப்பங்கள், தலைப்பின் உணர்திறன் மற்றும் வெளிநாடுகளில் நிலவும் நிலையற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொதுக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய உண்மையான ஆபத்து இருப்பதால் அவை நிராகரிக்கப்படும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!