
இந்நிலையில் சிங்கப்பூரில் பெருந்தொற்றால் 12 வயது கீழ் உள்ளவர்களின் இந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட முதல் மரணமாக அந்த குழந்தையின் மரணம் மாறியுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் அளித்த தகவலின்படி, கோவிட்-19 க்கு அக்டோபர் 10, 2023 அன்று நேர்மறை சோதனை செய்யப்பட்டு, அன்றைய தினமே அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த 13 மாத ஆண் குழந்தைக்கு "கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை" மற்றும் நோய்த்தொற்றுக்கு முன்னர் பிறப்பில் இருந்தே "குறிப்பிடத்தக்க மருத்துவ ரீதியான உடல் உபாதை" இருந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) மேற்கோள் காட்டியுள்ளது. அவரது இறப்புக்கான காரணம் கடுமையான கோவிட்-19 தொற்று என்றும், அவருக்கு ஏற்கனவே இருந்த உடல் உபாதையும் காரணம் என்றும் MOH மேலும் கூறியது.
ஆஸி.யில் இந்திய மாணவர் மீது கொடூரத் தாக்குதல்... கோமாவில் முடிந்த மூளை ஆபரேஷன்!
பெரியவர்களை விட குழந்தைகளில் கோவிட்-19ன் ஆபத்து குறைவாக இருந்தாலும், குறிப்பாக குழந்தைக்கு தடுப்பூசி போடப்படாத மற்றும் அடிப்படை நிலைமைகள் இருந்தால் "கடுமையான விளைவுகள்" ஏற்படலாம் என்று MOH எடுத்துரைத்தது. எனவே ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து நபர்களும் புதுப்பிக்கப்பட்ட Pfizer-BioNTech/Comirnaty அல்லது Moderna/Spikevax Covid-19 தடுப்பூசிகளின் கூடுதல் டோஸை ஓராண்டுக்கு மேல் எடுத்துக்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
விடுவிக்கப்பட்ட இஸ்ரேல் சிறுவன்: குடும்பத்தை கண்டதும் துள்ளிக் குதித்து ஓடிய நெகிழ்ச்சி!
முன்னதாக 2022 ஆம் ஆண்டில், கோவிட்-19 நோயால் 12 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளின் இறப்புகள் பதிவாகியிருந்தன. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கோவிட்-19லிருந்து குழந்தைகளிடையே இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.