பலூசிஸ்தான் சுதந்திரம் அறிவிப்பு; பாகிஸ்தானில் பதற்றம் அதிகரிப்பு

Published : May 14, 2025, 10:31 PM ISTUpdated : May 14, 2025, 10:43 PM IST
Balochistan

சுருக்கம்

பலூசிஸ்தான் தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் அறிவித்ததைத் தொடர்ந்து பதட்டம் அதிகரித்துள்ளது. மிர் யார் பலோச் உள்ளிட்ட தலைவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு, இந்தியா மற்றும் ஐ.நா.விடம் ஆதரவு கோரியுள்ளனர்.

பலூசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்றதாக மிர் யார் பலோச் உள்ளிட்ட பலூசிஸ்தான் தலைவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, 'பலூசிஸ்தான் குடியரசு' சமூக ஊடகங்களில் டிரெண்டாகி இருக்கிறது.

ஆபரேஷன் சிந்தூரை என்ற பெயரில் நடந்த சமீபத்திய எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டம் நிலவும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பலூச் கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளரும் பிரபல எழுத்தாளருமான மிர் யார் பலோச், எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகள் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

புது தில்லியில் பலூச் தூதரகத்தை அனுமதிக்குமாறு இந்திய அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார், மேலும் பலூசிஸ்தானுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்புமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தினார், அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

 

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

“நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அடைந்துவிட்டோம்”

100க்கும் மேற்பட்ட எரிவாயு கிணறுகள் உள்ள டேரா புக்தி பகுதியில் உள்ள பாகிஸ்தானின் எரிவாயு வயல்களை பலூச் சுதந்திரப் போராளிகள் தாக்கியதாக மிர் யார் பலூச் கூறினார்.

அவர் தனது ஒரு பதிவில், "பயங்கரவாத பாகிஸ்தானின் வீழ்ச்சி நெருங்கி வருவதால், விரைவில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். நாங்கள் எங்கள் சுதந்திரத்தைக் கோருகிறோம், மேலும் டெல்லியில் பலூசிஸ்தானின் அதிகாரபூர்வ தூதரகத்தை அமைக்க அனுமதிக்குமாறு இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சர்வதேச சமூகத்திற்கும் அவர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். "பலுசிஸ்தான் ஜனநாயகக் குடியரசின் சுதந்திரத்தை அங்கீகரிக்கவும், அங்கீகாரத்திற்கான உங்கள் ஆதரவை வழங்க அனைத்து ஐ.நா. உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டுமாறு நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையைக் கேட்டுக்கொள்கிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.

"பணப் பரிவர்த்தனை மற்றும் பாஸ்போர்ட் அச்சிடுதலுக்காக கோடிக்கணக்கில் நிதி விடுவிக்கப்பட வேண்டும்," என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நள்ளிரவில் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக். பிரதமர்.. இம்ரான் கானின் நிலை..?
ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!