ரிமோட் மூலம் இயக்கி ரணகளம் - பாகிஸ்தான் ரயிலில் வெடிகுண்டு வெடித்து 6 பேர் பலி

Asianet News Tamil  
Published : Oct 08, 2016, 11:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
ரிமோட் மூலம் இயக்கி ரணகளம் - பாகிஸ்தான் ரயிலில் வெடிகுண்டு வெடித்து 6 பேர் பலி

சுருக்கம்

பாகிஸ்தான் நாட்டின் போலான் மாவட்டத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் பலியானார்கள். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் போலான் மாவட்டத்தில், ராவல் பிண்டியில் இருந்து குவெட்டா நகருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரிமோட் மூலம் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு 20 நிமிட இடைவெளியில் 2 முறை வெடிக்கப்பட்டது.

இந்த வெடிகுண்டு வெடித்ததில், ரயிலில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 14 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பலுசிஸ்தானில் உள்ள பிரிவினைவாதிகள் இத்தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!