அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 57க்கும் மேற்பட்டோர் பலி - மிலாடி நபி கொண்டாட்டத்தின் போது சோகம்!

Published : Sep 29, 2023, 05:09 PM IST
அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 57க்கும் மேற்பட்டோர் பலி - மிலாடி நபி கொண்டாட்டத்தின் போது சோகம்!

சுருக்கம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா ஆகிய மாகாணங்களில் உள்ள மசூதிகளில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 57க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இன்று (செப்டம்பர் 29) பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான ஈத் மிலாதுன் நபியைக் கொண்டாடும் ஊர்வலத்தில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட குறைந்தது 43 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது செப்டம்பர் மாதத்திற்குள் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய வெடிப்பு ஆகும். முஹம்மது நபி பிறந்தநாளான ஈத் மிலாதுன் நபியை நினைவுகூருவதற்காக ஒரு கூட்டம் கூடியிருந்த மசூதிக்கு அருகில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக மஸ்துங் உதவி ஆணையர் அட்டா உல் முனிம் தெரிவித்தார் என்று ஜியோ டிவி தெரிவித்துள்ளது.

சட்ட அமலாக்க அதிகாரிகளால் தற்கொலை குண்டுவெடிப்பு என்று நம்பப்படும் இந்த வெடிப்பு, மதீனா மசூதிக்கு அருகாமையில், மக்கள் ஒரு மத ஊர்வலத்தில் பங்கேற்க தயாராகிக்கொண்டிருந்தபோது நடந்தது என்று தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) நவாஸ் காஷ்கோரியும் உள்ளதாக ஜியோ டிவியின் அறிக்கை தெரிவிக்கிறது.

மற்றொரு சம்பவத்தில், கைபர் பக்துன்க்வாவின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் ஒரு போலீஸ்காரர் உட்பட மூன்று இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் 12 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த தாக்குதலின் போது மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 30-40 பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியதாக மாவட்ட காவல்துறை அதிகாரி நிசார் அகமது தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி, சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மஸ்துங் மற்றும் ஹாங்குவில் அடுத்தடுத்து நடந்த வெடிப்புகள் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேதத்தின் முழு அளவைக் கண்டறியவும், அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று தகவல் வெளியாகி உள்ளது.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!