இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவத்துக்கு அதிகாரம்!!

Published : May 07, 2025, 04:09 PM ISTUpdated : May 07, 2025, 04:10 PM IST
இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவத்துக்கு அதிகாரம்!!

சுருக்கம்

இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் தனது ராணுவத்திற்கு அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்துக்கு அனுமதி 
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தனது ஆயுதப் படைகளுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்த கொடிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், புதன்கிழமை அதிகாலை இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பாகிஸ்தான் இறையாண்மை மீறப்பட்டு இருக்கிறதாம்:
ஐ.நா. சாசனத்தின் பிரிவு-51 இன் படி, அப்பாவி பாகிஸ்தானிய உயிர்களை இழந்ததற்கும் அதன் இறையாண்மையை அப்பட்டமாக மீறியதற்கும் பழிவாங்க, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், இடத்தில் மற்றும் முறையில் தற்காப்புக்காக பதிலளிக்கும் உரிமையை பாகிஸ்தான் கொண்டுள்ளது," என்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது'' என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு ஷெபாஸ் ஷெரீப் உரை:


முன்னதாக, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்படும் சூழ்நிலை மற்றும் அதன் சாத்தியமான தாக்கங்கள் குறித்து NSC விவாதித்தது. முன்னேற்றங்களை மேலும் மதிப்பிடுவதற்காக பிரதமர் ஷெரீப் மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பின்னர் பிரதமர் நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக இந்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள முக்கிய பயங்கரவாத முகாம்களை இந்தியா குறிவைத்தது. இது இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு