லிபியா நாட்டில் கடும் வெள்ளம்.. 10,000 பேரை காணவில்லை - செஞ்சிலுவை சங்கம் அளித்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Ansgar R |  
Published : Sep 12, 2023, 09:55 PM IST
லிபியா நாட்டில் கடும் வெள்ளம்.. 10,000 பேரை காணவில்லை - செஞ்சிலுவை சங்கம் அளித்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

சுருக்கம்

கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், அதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை அபாயகரமாக அளவில் உயரும் என்று அஞ்சப்படுகிறது. அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி நூற்றுக்கணக்கான மக்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

துருக்கி, பல்கேரியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளை தாக்கிய டேனியல் புயல், மத்தியதரைக் கடலில் வீசியதைத் தொடர்ந்து லிபியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று லிபியா நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை, அதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் அதிகாரி டேமர் ரமலான் தெரிவித்துள்ளார். 

"லிபியாவில் களத்தில் உள்ள எங்கள் குழுக்கள் இன்னும் தங்கள் மதிப்பீட்டைச் செய்து கொண்டிருக்கின்றன, ஆனால் நாங்கள் பார்ப்பது மற்றும் எங்களுக்கு வரும் செய்திகளிலிருந்து, இறப்பு எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உள்ளது" என்று அவர் துனிஸில் இருந்து வீடியோ இணைப்பு மூலம் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

உக்ரைன் மீது போர் தொடுக்க வடகொரியாவிடம் ஆயுதங்கள் வாங்கும் ரஷ்யா; தனி ரயிலில் மாஸ்கோ சென்ற கிம் ஜாங் உன்!!

"இப்போது எங்களிடம் திட்டவட்டமான எண்ணிக்கை இல்லை," என்று அவர் கூறினார், "மேலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இதுவரை 10,000 பேரைத் தூண்டியுள்ளது" என்றும் அவர் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். 

கிழக்கு பகுதி அரசாங்கத்தின் பிரதம மந்திரி Oussama Hamad பேசுகையில், டெர்னா நகரில் மட்டும் "2,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை காணவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் எந்த மருத்துவ ஆதாரங்களும் அல்லது அவசர சேவைகளும் அத்தகைய புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தான் பார்க்கும் புள்ளிவிவரங்களில் இருந்து ஆராயும்போது, ​​"(கிழக்கு அதிகாரியால்) அறிவிக்கப்பட்ட எண் சரியான எண்ணுக்கு அருகில் இருக்க வாய்ப்புள்ளது" என்று ராமதாஸ் கூறினார்.
இன்று செவ்வாய்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட பேரழிவின் துல்லியமான எண்ணிக்கையை IFRC வழங்க முடியும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

உலகத்திலேயே சின்ன நம்பர் பிளேட் இதுதான்.. போலீசார் மண்டையை சூடாக்கிய நபர் - உங்க லொள்ளுக்கு ஒரு அளவு இல்லையா?

PREV
click me!

Recommended Stories

Alien Life Research : டைனோசர் முட்டை.. நாசா மிஷனில் பெரிய திருப்பம்... ஆடிப்போன விஞ்ஞானிகள்
Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு