தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் - "அது பிராந்திய மோதலாக மாறலாம்" - ஹெஸ்புல்லா தலைவர் எச்சரிக்கை!

Ansgar R |  
Published : Nov 04, 2023, 08:11 AM IST
தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் - "அது பிராந்திய மோதலாக மாறலாம்" - ஹெஸ்புல்லா தலைவர் எச்சரிக்கை!

சுருக்கம்

Israel Hamas War : காஸா மீதான தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில், இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான போர், பிராந்திய மோதலாக மாறும் என்றும், அமெரிக்காவின் பொறுப்பை உறுதியாக நம்புவதாகவும் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா எச்சரித்துள்ளார். 

ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்கு முன்னர் போர் வெடித்த நிலையில், முதல் முறையாக அவர் இந்த உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  சக்திவாய்ந்த ஈரான் ஆதரவு இயக்கத்தின் தலைவரான அவர், லெபனானுக்கும் இந்த மோதல் விரிவடைய "எல்லா வாய்ப்புகளும்" உள்ளது என்று எச்சரித்தார்.

"காசா மற்றும் அதன் மக்கள் மீது நடந்து வரும் போருக்கு அமெரிக்காவே முழுப் பொறுப்பாகும் என்றும், மேலும் இஸ்ரேல் வெறுமனே மரணதண்டனைக்கான ஒரு கருவியாகும்" என்று நஸ்ரல்லா ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பில் கூறினார், மோதலை "தீர்மானமானது" என்றும் அவர் அழைத்து குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேல் - ஹமாஸ் போர்; ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் ரஷ்யாவின் வாக்னர் குரூப்!!

மேலும் இந்த போர் "ஒரு பிராந்தியப் போராக மாறுவதை தடுக்க விரும்புவோர், (இது அமெரிக்கர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது, என்றார் அவர்) காசா மீதான ஆக்கிரமிப்பை விரைவாக நிறுத்த வேண்டும்," என்று அவர் கூறினார். இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட குழுவின் போராளிகளின் நினைவாக நடைபெற்ற ஹிஸ்புல்லாவின் கோட்டையான பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். 

ஹமாஸ் போராளிகள் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி அதிர்ச்சித் தாக்குதலை நடத்தியதில் இருந்து, லெபனானின் தெற்கு எல்லையானது, முக்கியமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியக் குழுவின் கூட்டாளியான ஹெஸ்பொல்லாவுக்கும் இடையே, ஒரு பரந்த போர் பற்றிய அச்சத்தைத் தூண்டி, டைட் ஃபார்-டாட் பரிமாற்றங்களை அதிகரித்தது.

வீட்டு வசதி திட்டம்.. இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலும் 10,000 வீடுகள் - நிதியமைச்சர் கொடுத்த தகவல்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல் குழுக்களை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், எதிர்ப்பாளரான நஸ்ரல்லா, "மத்தியதரைக் கடலில் உள்ள உங்கள் கடற்படை எங்களை பயமுறுத்தவில்லை... நீங்கள் எங்களை அச்சுறுத்தும் கடற்படையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!