இஸ்ரேல் ராணுவ தளத்தின் மீது நடுங்க வைக்கும் பயங்கர தாக்குதல்; வீடியோவை வெளியிட்ட ஹமாஸ் தீவிரவாதிகள்!!

Published : Oct 13, 2023, 10:13 AM ISTUpdated : Oct 13, 2023, 10:19 AM IST
இஸ்ரேல் ராணுவ தளத்தின் மீது நடுங்க வைக்கும் பயங்கர தாக்குதல்; வீடியோவை வெளியிட்ட ஹமாஸ் தீவிரவாதிகள்!!

சுருக்கம்

பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் அக்டோபர் 7 ஆம் தேதி நடத்திய தாக்குதலின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேலிய ராணுவ தளத்தை தாக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது.  கிசுஃபிம் ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.  கான் யூனிஸின் கிழக்கே ராணுவ முகாமில் இருந்த இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது பிணைக் கைதிகளாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான 'அல் அக்ஸா ஃபிளட்' என்ற பெயரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் வீடியோவில் பதிவிட்டுள்ளது.

இஸ்ரேலில் சிக்கி தவித்த இந்தியர்கள்!விமானம் மூலம் 212 பேர் மீட்பு-ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார்!!

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி இருந்தனர். ஒரே நேரத்தில் 5,000 ஏவுகணைககளைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தற்போது போராக மாறியுள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இவர்களை விடுவிக்க இஸ்ரேல் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 60 பேர் மீட்கப்பட்ட நிலையில், 25 பேர் ஹமாஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது ஹமாஸின் உச்சபட்ச கமாண்டோவான நுக்பா படையின் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் இதுவரை ஹமாஸ் தீவிரவாதிகளின் இடத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 4000 டன் வெடிபொருட்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. 

காசாவில் 50,000 கர்ப்பிணிகளுக்கு குடிநீர் இல்லை; அரபு நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பயணம்!!

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு