sri lanka crisis: gotabaya rajapaksa இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாளை நாடு திரும்புகிறாரா?

By Pothy RajFirst Published Sep 2, 2022, 1:33 PM IST
Highlights

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாளை(சனிக்கிழமை) தாய்லாந்தில் இருந்து நாடு திரும்புவார் என்று இலங்கை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஏஎப்பி செய்திகள் தெரிவிக்கின்றன

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாளை(சனிக்கிழமை) தாய்லாந்தில் இருந்து நாடு திரும்புவார் என்று இலங்கை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஏஎப்பி செய்திகள் தெரிவிக்கின்றன

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவு, மக்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பி கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றார். பின்னர் அங்கிருந்து தாய்லாந்தின் பாங்காக் நகரில் தற்போது கோத்தபய ராஜபக்சே வசித்து வருகிறார்.

இலங்கைக்கு கடந்த மாதம் செல்வதற்கு கோத்தபய ராஜபக்ச அவரின் மனைவி திட்டமிட்டிருந்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக கோத்தபய ராஜபக்சவை வெளியே செல்ல வேண்டாம் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களால் ஹோட்டலுக்குள்ளே இருக்க வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சவிடம், பாங்காக் போலீஸார் கேட்டுக்கொண்டனர்.

starbucks: ceo: ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்

பாங்காக்கில் எந்த ஹோட்டலில் கோத்தபய ராஜபக்ச தங்கியுள்ளார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. தாய்லாந்து அரசு அதை ரகசியமாக வைத்துள்ளது. கோத்தபய ராஜபக்ச தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு 24 மணிநேரமும் சீருடையில்லாமல் சிறப்பு போலீஸ் பிரிவு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தாய்லாந்தில் இருந்து கோத்பய ராஜபக்சே நாளை நாடு திரும்பலாம் என்று இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில் “ தாய்லாந்தின் ஓர் ஹோட்டலில் சிறைக் கைதி போல், கோத்தபய ராஜபக்ச முடங்கியுள்ளார். 90 நாட்கள் வரை தாய்லாந்து அரசு கோத்தபய ராஜபக்சேவுக்கு விசா அளித்துள்ளது. 

ஆனால், அவர் இலங்கைக்கு வருவதற்கு ஆர்வமாக இருக்கிறார். அனேகமாக, சனிக்கிழமை அதிகாலை இலங்கைக்கு ராஜபக்ச வரலாம். அவருக்காக புதிய பாதுகாப்பு பிரிவை உருவாக்கியுள்ளோம். அவர் இலங்கைக்கு வந்தபின் அந்தப் பாதுகாப்பு பிரிவு அவருக்கு பாதுகாப்பு வழங்கும்.

china news: சீனா சந்திக்கும் புதிய தலைவலி! 36 ஆண்டுகளில் இல்லாத அளவு திருமணம் குறைந்துவிட்டது

இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் ராணுவம் மற்றும் போலீஸார்இருவரும் அடங்கியுள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.இலங்கைக்கு நாளை கோத்தபய ராஜபக்சே வருவதாக எழுந்த செய்தியால், இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் செட்டில் ஆகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய கோத்தபய ராஜபக்ச அதிலிருந்து ஓய்வு பெற்று, கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். அதன்பின் தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச அரசியலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன்பெயரில் 2005ம் ஆண்டு இலங்கை திரும்பினார். அப்போது அமெரிக்க குடியுரிமையை கோத்தபய ராஜபக்ச வைத்திருந்தார்.

ஆனால் 2019ம் ஆண்டு இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், வேறுநாட்டு குடியுரிமை பெற்று இருக்கக்கூடாது என்ற விதி இருந்தது. இதன் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமையை கோத்தபய ராஜபக்ச துறந்தார். இப்போது மீண்டும் அமெரிக்காவில் குடியேறுவதற்கான பணியில் கோத்தபய ஈடுபட்டுள்ளார்.

Dawood Ibrahim age: ‘நிழல்உலக தாதா’ தாவுத் இப்ராஹிம் பற்றி தகவல் அளித்தால் ரூ.25 லட்சம் பரிசு: என்ஐஏ அறிவிப்பு

இதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுவதால் கொழும்புவில் உள்ள கோத்தபய வழக்கறிஞர்கல், அதைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

click me!