ஆப்பிரிக்காவில் அசத்தப்போகும் ஃபேஸ்புக் நிறுவனம்..!! இளைஞர்களை குறிவைப்பது ஏன்?

Published : May 17, 2020, 11:26 PM IST
ஆப்பிரிக்காவில் அசத்தப்போகும் ஃபேஸ்புக் நிறுவனம்..!! இளைஞர்களை குறிவைப்பது ஏன்?

சுருக்கம்

அப்ரிக்க கண்டத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சியாக அங்குள்ள இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்க இருக்கிறது..

ஆப்ரிக்க கண்டத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சியாக அங்குள்ள இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்க இருக்கிறது..
ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள 16 ஒரு முயற்சியில் ஃபேஸ்புக் நிறுவனம் இறங்கி உள்ளது. அதாவது அங்குள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து கடலுக்கு அடியில் 37,000 கி.மீ நீளத்துக்கு பைபர்களை பதிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

ஆப்ரிக்காவில் உள்ள இளைய தலைமுறையினரிடம் ஃபேஸ்புக்கை எடுத்து செல்லும் முயற்சியாக இதை செய்கிறது அந்நிறுவனம். 
2024ஆம் ஆண்டு இது பயன்பாட்டுக்கு வரும். சர்வதேச அளவில் சராசரியாக பத்தில் ஆறு பேருக்கு இணைய சேவை கிடைக்கும் போது, ஆப்ரிக்காவில் சராசரி பத்துக்கு நான்காக உள்ளது.130 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த கண்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த வணிகத்திற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆப்ரிக்காவையும், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் இந்த 2அ ஆப்ரிக்கா எனும் இந்த திட்டத்தின் மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!
அமெரிக்காவை விட்டு வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு ரூ.3 லட்சம்! டிரம்ப் அதிரடி அறிவிப்பு!