தன் சுயநலத்துக்காக பூமியை அழிவுப் பாதைக்கு காெண்டு சென்றுவிட்டு, அதிலிருந்து தப்பிப்பதற்காக தற்பாேது வேறு கிரகத்திற்குச் சென்று குடியேற அமெரிக்கா ஒரு மிகப்பெரும் திட்டம் ஒன்றை தீட்டிவருவதாக அதிா்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா விஞ்ஞானம் என்ற பெயரில் உலகை அழிவுக்கு அழைத்து செல்கின்றது. உலகம் முழுவதனையும் ஆட்சி செய்யவே அமெரிக்காவின் NASA, UN, DARPA (அமெரிக்காவின் இராணுவ ஆய்வு மையம்) போன்றவை செயல்படுவதாக மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.
செயற்கையாக காலநிலையை மாற்றி புவியை கட்டுப்படுத்தி உலகை ஆட்டு விக்கும் திட்டமே இது. அதனையே அமெரிக்கா செய்து வருகின்றது என ஆய்வாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வானிலையை தமக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தி உலகை ஆட்டிப்படைக்க முடியும் என அமொிக்காவின் எண்ணமாக உள்ளது.
இப்போதைய அறிவியல் வளர்ச்சியின் படி பஞ்சம், வறட்சி தலைவிரித்தடும் போது செயற்கையாக மழையை பெய்விக்க முடியும்.
அதே போன்று அடுத்த பக்கம் பெய்ய வரும் மழையை தடுத்து நிறுத்தவும் முடியும். உலகம் தோன்றி மனித நாகரீகம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்த போது காலநிலைகள் தாறுமாறாக மாற்ற மடையவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம். இவை அனைத்துமே சரியான காலப்பகுதியில் இரகசியமாக அமொிக்கா நடத்துகிறது என்ற உண்மை வெளிப்படுகிறது.
துருவம் உருகுகிறது, எல் நினோ மூலம் பஞ்சம், புவி வெப்பமயமாதல், ஓசோனில் ஓட்டை, திடுக்கென்று சுனாமி, வரலாறு காணாத வகையில் வறட்சி, திடீரென பூமிக்கடியில் நகரும் பிளேட் மூலம் நிலநடுக்கம் என வரும் நூற்றுக்கணக்கான செய்திகள் மனிதனின் அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அண்மையில் வாஷிங்டனில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் பேசிய பென்டகன் அமெரிக்க பாதுகாப்பு தலைமையக அதிகாரி வின்ஸ்டன் பியவுசெப், அமெரிக்கர்களை பூமியைவிட்டு வேறு கிரகத்துக்கு இடம்பெயரச்செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை தொிவித்துள்ளாா். கோள்களை ஆராய்ச்சி செய்வதில் தவறான முடிவுகள் கிடைத்துள்ளன. ஆனால், உண்மையில் பூமிக்கு அருகிலேயே மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற பல கிரகங்கள் உள்ளன என்றும் வின்ஸ்டன் குறிப்பிட்டுள்ளாா்.
அமெரிக்காவின் செயற்கை கோள்கள் தாக்கி அழிக்கப்படுமானால், அமெரிக்காவுக்கு ஈடுசெய்ய முடியாத பெரிய இழப்பு உண்டாகும். இதனால், அமெரிக்கர்களை பூமியைத் தவிர, பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அனுப்புவது முக்கியமான தேவையாகிள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.