முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த அதிபர்.. கொரோனாவால் பலியானவர்களின் புதிய எண்ணிக்கையை வெளியிட்ட சீனா.!

By vinoth kumarFirst Published Apr 17, 2020, 6:59 PM IST
Highlights

முதலில் கொரோனா பரவிய வூஹான் நகரில் 2,579 பேர் உயிரிழந்ததாக சீனா அரசு தெரிவித்தது. ஆனால், உலக நாடுகள் இதனை நம்பவில்லை. கொரோனாவின் தன்மையை சீனா மறைத்ததாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. மேலும், அந்நாட்டில் கொரோனா மரணம், சீனா அரசு தெரிவித்ததை விட பல மடங்கு அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கும் என தெரிவித்தன. 

கொரோனா வைரஸின் பிறப்பிடமான வூஹான் நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளதாக சீனா ஒப்புதல் அளித்துள்ளது. ஆகையால், உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கையுடன் மேலும், 1,290 மரணங்களை கூடுதலாக சேர்த்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் இதுவரை 21,00,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் 13,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 437 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், முதலில் கொரோனா பரவிய வூஹான் நகரில் 2,579 பேர் உயிரிழந்ததாக சீனா அரசு தெரிவித்தது. ஆனால், உலக நாடுகள் இதனை நம்பவில்லை. கொரோனாவின் தன்மையை சீனா மறைத்ததாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. மேலும், அந்நாட்டில் கொரோனா மரணம், சீனா அரசு தெரிவித்ததை விட பல மடங்கு அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கும் என தெரிவித்தன. இந்நிலையில் வுஹான் நகரில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை சீனா உயர்த்தியுள்ளது. மொத்த பலி எண்ணிக்கையில் 1,290 மரணங்களை கூடுதலாகச் சேர்த்துள்ளது. இதனையடுத்து அந்நகரில் பலி எண்ணிக்கை 3,869 ஆக உள்ளது.

இதன் மூலம் அந்நகரில் மட்டும் 3,869 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் சீனாவில் 82, 692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 4,632 பேர் உயிரிழந்துள்ளனர். 77,944 பேர் குணமடைந்துள்ளனர். எஞ்சிய 116 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில், 89 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றுதகவல் தெரிவித்துள்ளது.

click me!