ஓடியோடி சம்பாதித்த பணத்தை தீவைத்து எரிக்க முடிவு செய்த சீனா...!! உயிரை வாங்கும் கொரோனா பணம் கேட்கிறது..!!

Published : Feb 19, 2020, 04:47 PM IST
ஓடியோடி சம்பாதித்த  பணத்தை தீவைத்து எரிக்க முடிவு செய்த சீனா...!!  உயிரை வாங்கும் கொரோனா பணம் கேட்கிறது..!!

சுருக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நோயாளி தும்மினாலோ இருமினாலோ அதனால் வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாக கொரோனா பரவ வாய்ப்புள்ளது .

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் வைரஸ் தொற்று உள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது .  வைரஸ் தொற்று உள்ள கரன்சி நோட்டுகள் கொரானா வைரஸ் வேகமாக பரவ ஒரு காரணமாக இருப்பதாக தெரியவந்ததையடுத்து  இந் நடவடிக்கையை  சீன மத்திய வங்கி எடுக்க முடிவு செய்துள்ளது . சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் சீனாவில்  வேகமாக பரவி வருகிறது .  இதுவரை 2007 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் . 72 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . 

இந்த வைரஸை கட்டுப்படுத்த இதுவரையில் மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை ,  ஆகவே வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது .  24 மணி நேரமும் மக்களின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர் .  ஆனால் இதில் மருத்துவர்களும் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .  வைரஸை கட்டுப்படுத்த சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் எதிலும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை ,  இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுவீடாகச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது . கொரோனா வைரஸ் பாதிப்பினால் நோயாளி தும்மினாலோ இருமினாலோ அதனால் வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாக கொரோனா பரவ வாய்ப்புள்ளது . 

இதனால் நுண் எச்சில் துகள்கள் படிந்த கரன்சி நோட்டுகள் மூலமாகவும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது . எனவே மருத்துவமனைகள்,  ஷாப்பிங் மால்கள் பேருந்துகள் போன்றவற்றில் கிடைக்கும்  கரன்சி நோட்டுகளை அழிக்க சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது . இந்நிலையில் வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதிகளில்  வங்கிக்கு வரும் நோட்டுகளை 14 நாட்கள்  அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பத்தில் வைத்து இந் நோட்டுகளை அழிக்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.  

 

 

PREV
click me!

Recommended Stories

Airtel Minimum Recharge: ரொம்ப ரொம்ப கம்மி விலையில் 365 நாள் வேலிடிட்டி..
மைக் டூ மந்திரி சபை: நேபாளத்தை ஆளப்போகும் ராப் இசை கலைஞர்! பலேன் ஷா - அடுத்த பிரதமர்?