கொரோனா பாதித்த சீன பயணிகளை தடுக்க தவறிய ஐரோப்பா...!! உள்ளே வராதே என கறார் காட்டும் அமெரிக்கா...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 12, 2020, 1:20 PM IST
Highlights

நாட்டுமக்களுக்கு உரையாற்றிய அவர்,  கொரோனா வைரஸில் பிறப்பிடமான சீனாவில் இருந்து வரும் பயணிகளை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தவறிவிட்டன இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக  உள்ளது எனவே  ஐரோப்பியர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்படுகிறது ,

ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வர நாளை முதல் 30 நாட்களுக்கு  தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் .  நாளுக்கு நாள் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் இம்முடிவெடுத்துள்ளார்.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்  பரவியுள்ளது.  இந்த வைரஸ் பல நாடுகளில் மிகத்தீவிரமான  தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது.   அமெரிக்கா ,  ஜப்பான் ,  தென் கொரியா ,  ஈரான் ,  இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

 உலகம் முழுவதும் சுமார் 4627 பேர் பலியாகியுள்ளனர் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது . அமெரிக்காவிலும் இந்த வைரசுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அமெரிக்காவில்  இந்த வைரசுக்கு  31 பேர் உயிரிழந்துள்ளனர் .  ஆயிரத்துக்கும்  மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில்  வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த  ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வர 30 நாட்களுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார் .  அதேபோல் பிரிட்டனுக்கு தடை பொருந்தாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் . 

நாட்டுமக்களுக்கு உரையாற்றிய அவர்,  கொரோனா வைரஸில் பிறப்பிடமான சீனாவில் இருந்து வரும் பயணிகளை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தவறிவிட்டன இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக  உள்ளது எனவே  ஐரோப்பியர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்படுகிறது ,  வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அனுமதிக்கப்படுவார்  என  டிரம்ப் தெரிவித்தார் .  அதேபோல கொரோனா  பாதிப்பு அதிகமாக உள்ள வாஷிங்டன் ,  பிரான்சிஸ்கோவில் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வாஷிங்டனில் பொது சுகாதாரத்துறை அவசர பிரகடனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .
 

click me!