ஜப்பானில் டோபாவின் தென்கிழக்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையா?

Published : Nov 14, 2022, 02:50 PM ISTUpdated : Nov 14, 2022, 03:49 PM IST
ஜப்பானில் டோபாவின் தென்கிழக்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையா?

சுருக்கம்

ஜப்பானில் டோபாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரைக்கும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.  

ஜப்பானின் டோபாவின் தென்கிழக்கே 84 கிமீ தொலைவில் இன்று 13:38:26 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இருந்தது என்று யு.எஸ்.ஜி.எஸ் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் 350 கி. மீட்டர் ஆழத்தில் இருந்து உருவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நேரத்தின்படி இன்று 14ஆம் தேதி மாலை 5.09 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் இதுவரை யாருக்கும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

G20 summit2022:ஜி20 உச்சி மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு,சுற்றுச்சூழல் பற்றி ஆலோசிப்பேன்:பிரதமர் மோடி அறிவிப்பு

அந்த நாட்டின் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கும் தகவலில் ஃபுகுஷிமா அணு உலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளன. டோக்கியோவின் வடக்கே உள்ள ஃபுகுஷிமா மற்றும் இபராக்கி மாகாணங்கள், நில நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதிலும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தை  வலுவாக உணர்ந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ ஆகியவை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டன.

G-20 Summit 2022:ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம்: ஆலோசிக்கப்படும் அம்சங்கள்?

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு