உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. இந்த போர் 3வது ஆண்டை இன்னும் சில நாட்களில் நிறைவு செய்ய உள்ளது. தற்போது போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வமாக உள்ளார்.போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கவில்லை என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறிய நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை கடுமையாக திட்டி தீர்த்துள்ளார்.