இந்தியா, அமெரிக்கா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான தனது உறவை இந்தியா மேலும் வலுப்படுத்த தயாராக உள்ளது. இந்நிலையில், டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்பு வெளியான மறுநாளே (அதாவது நேற்று) இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசியுள்ளார்.