
காசாவின் நெட்ஸரிம் காரிடார் அருகே, உணவுப் பொதிகள் விமானத்தில் இருந்து வீசப்பட்டன. அப்போது, ஒரு உணவுப் பெட்டி முஹன்னத் சக்காரியா ஈத் என்ற 15 வயது சிறுவன் மீது விழுந்ததில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில், பலர் அந்தச் சிறுவனைச் சுற்றி நின்று அவனைக் காப்பாற்ற முயல்கிறார்கள்.மற்றொரு வீடியோவில், சிறுவனின் சகோதரன் அவனை அந்த இடத்திலிருந்து தூக்கிச் செல்வதும், அவனது தந்தை மருத்துவமனையில் மகனின் உடலை அணைத்தபடி அழுவதும் பதிவாகியுள்ளது.