காசா எல்லை.. நிலைமை மிகவும் மோசமாக இருக்கு.. Asianet Newsக்கு Exclusive பேட்டி அளித்த இந்திய வம்சாவளி யூதர்கள்

காசா எல்லை.. நிலைமை மிகவும் மோசமாக இருக்கு.. Asianet Newsக்கு Exclusive பேட்டி அளித்த இந்திய வம்சாவளி யூதர்கள்

Ansgar R |  
Published : Oct 19, 2023, 08:06 PM IST

Asianet News Exclusive : கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் போராளிகள் நடத்திய கொடூர தாக்குதலில், இஸ்ரேல் நாட்டில் உள்ள பலர் இறந்தனர். இதனையடுத்து இஸ்ரேல் மாற்றும் ஹமாஸ் இடையே போர் மூண்டுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என்று பலர் இந்த கொடூர போரில் கொல்லப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காசா எல்லையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நகருக்கு நமது ஏசியாநெட் சுவர்ணா நியூஸின் ஆசிரியர் அஜித் ஹனமக்கனவர் சென்று, அங்குள்ள இரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலரைச் சந்தித்து நிலைமையை கேட்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த யூதர்கள் இருவரை அவர் சந்தித்து பேசியுள்ளார். 

ஹருனும், ஜூலியும் கடந்த 1969ம் ஆண்டு இஸ்ரேலுக்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நமது செய்தி நிறுவனத்துக்கு அளித்த பிரதியாக பேட்டி பின்வருமாறு.. "கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, சிம்சாத் தோராவை முன்னிட்டு பிரார்த்தனை செய்ய காலை 6:30 மணிக்கு மசூதிக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​சைரன் ஒலித்துள்ளது. இந்நிலையில் ஹாருனும் மற்றவர்களும் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிய பிறகு ஒரு நியமிக்கப்பட்ட அறையில் பாதுகாப்பு தேடி சென்றுள்ளனர்.

தொழுகையை முடிந்ததும், அவர்கள் இடத்துக்கு அருகில் ஒரு ராக்கெட் தாக்கியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அவர்களுடன் உரையாடலின் போது, ​​இருவரும் தொடர்ந்து வன்முறை அச்சுறுத்தல் மற்றும் நிம்மதியாக வாழ இயலாமை குறித்து தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர். அவர்கள் பயங்கரவாதிகளின் உள்நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அப்பாவி பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வருத்தத்தோடு பேசினார். 

ராக்கெட் தாக்குதல்கள் அவ்வப்போது நடப்பதாக ஹாருன் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல்களின் போது ராக்கெட்டுகள் வானில் ஏவப்பட்ட பல நிகழ்வுகளை அவர் கண்டுள்ளார். அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளின் நிலைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​​​ஜூலி தனது 89 வயதான தாயார் ராக்கெட் தாக்குதல் தளத்திற்கு அருகில் இருந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ஜூலியின் குடும்பத்தில் இராணுவ உறுப்பினர்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகத்து.

ஹமாஸை ஆதரிப்பவர்கள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக இருப்பவர்களை மனிதாபிமானமற்றவர்கள் என்று ஜூலி முத்திரை குத்தினார். அவர்களை 'பேய்கள்' என்று குறிப்பிட்டார். ஹமாஸின் செயல்களை, குறிப்பாக அப்பாவி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் தீங்குகளை அவர் விமர்சித்தார். ஹருன் அவர்களும் அவருடைய கருத்துக்களை வரவேற்றார். 

ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை, குறிப்பாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் குறிப்பிட்டார், மேலும் தனிநபர்களைப் பிடிக்கவும் தவறாக நடத்தவும் ஹமாஸ் பயன்படுத்தும் முறைகள் குறித்து கவலைகளை எழுப்பினார் ஜூலி.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தில் பொதுமக்களின் உயிரிழப்புகள் பற்றி கேட்டபோது, ​​ஜூலி பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார். ஆனால் இப்பொது நிலைமை சிக்கலானது என்று அவர் கூறினார். எதிர் தரப்பில் உள்ளவர்கள் ஹமாஸை ஆதரிப்பதை நிறுத்தினால், அமைதிக்கான வாய்ப்பு இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

பாலஸ்தீனத்தில் உள்ள இளைய தலைமுறையினர் எப்படி வலுவான இஸ்ரேல் எதிர்ப்பு உணர்வுகளையும் ஹமாஸுக்கு ஆதரவையும் பெற்றுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியபோது, ​​"இஸ்ரேல் நல்லதல்ல" என்ற நம்பிக்கையுடன், அந்த உணர்வுகளை சிறுவயதிலிருந்தே இளம் மனங்களில் அடிக்கடி புகுத்துவதாக அவர் கூறினார். 

கடந்த காலங்களில் சமாதானத்திற்கான சாத்தியக்கூறுகள் இருந்திருக்கலாம் என இருவருமே தற்போது நம்பும் சூழ்நிலை நிலவுகிறது, ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில், அவர்கள் அதை அடையக்கூடியதாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்பது அவர்களுடைய பேச்சில் தெரிந்தது. காசாவை மேம்படுத்துவதற்கு பதிலாக பயங்கரவாதத்தை நோக்கி பணம் செலுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஹருன், இந்தியாவில் தனது நேர்மறையான அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்டார், அங்கு அவரும் அவரது குடும்பத்தினரும் நன்றாக நடத்தப்பட்டனர் மற்றும் எப்போதும் வீட்டில் இருப்பதாக உணர்ந்ததாக கூறினார். இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான தொடர்பை குறித்து அவர் எடுத்துரைத்தார், போரில் இஸ்ரேலுக்கு இந்தியாவின் ஆதரவின் அவசியத்தை வெளிப்படுத்தினார் ஹருன்.
ஜூலியும், இந்தியா மீதான தனது அன்பையும், நமது நாட்டுடனான தனது குடும்பத்தின் வலுவான உறவுகளையும் வெளிப்படுத்தினார். 

04:47மம்மிகள் வெளிப்படுத்தும் ரகசியங்கள்.! ஆச்சரியமூட்டும் அறிவியல் அறிவு.!
03:40டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!
03:35ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்....பற்றியெரியம் தலைநகா் ஈரானின் தெஹ்ரான் !
01:27அச்சச்சோ..மெல்ல மெல்ல சுருங்கி வரும்..சூரியன் குடும்பத்தின் சுட்டி கோள்?
03:03சீனாவின் சாணக்யர் வாங் யி - பாகிஸ்தான் ராணுவத் தலைவர் முனீர் சந்திப்பு.....பதற்றத்தில் இந்தியா..!
02:03அமெரிக்காவை வெறுப்பேற்றும் இந்தியா! ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!
02:14உலக புகழ்ப்பெற்ற youtube ஜட்ஜ் கேப்ரியோ காலமானார்....கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி !
02:11நடுவானில் தீப்பிடித்து எரிந்த இன்ஜின்! நூலிழையில் உயிர்தப்பிய 270 பயணிகள்! என்ன நடந்தது?
03:05ரஷ்யாவால் அதிக லாபம் பார்க்கும் இந்தியா...வயித்தெரிச்சலில் அமெரிக்கா ! கொந்தளிக்கும் பெசண்ட்
02:32பாகிஸ்தான் அதிபராகிறாரா அசீம் முனீர் பிரேசிலில் வாயை விட்ட ராணுவ தளபதி அடுத்து என்ன?
Read more