விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!

விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!

Ansgar R |  
Published : Mar 19, 2024, 11:35 PM IST

Viruthunagar : விருதுநகரில் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட நகரின் முக்கிய பிரதான சாலையான பழைய பேருந்து நிலையம் புள்ளளக்கோட்டை சாலையில், நெடுஞ்சாலை துறையினர் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பொதுவாக புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி இரவு நேரங்களில் நடைபெறும் நிலையில், எந்தவித முன்னறிவுப்பும் இல்லாமல், அறிவிப்பு பதாகைகள் எதுவும் வைக்கப்படாமல் மாலை வேளையில் தார் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது. இந்நிலையில் மீனாம்பிகை பங்களா பகுதியில், சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்து செல்வதற்கு வழியில்லாமல் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தும் நிர்பந்தம் ஏற்பட்டது.

இதனால் சாலை பணியாளர்களுக்கும், பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாலை வேளையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலும் முறையான வழிகாட்டுதல் இல்லாமலும் சாலையை அமைத்ததால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

07:48பேரவையில் பிரேமலதா விளாசல்: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாத அரசுக்கு கண்டனம்!
03:40மேகதாட்டு விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகத் தாக்கிய பிரேமலதா விஜயகாந்த் !
01:48TN Budget: சட்டப்பேரவை பட்ஜெட் குறித்து அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் கடுமையான விமர்சனம்!
01:51டெல்லியில் கனமழை: சைனிக் ஃபார்ம்ஸ் பகுதியில் வெள்ளத்தில் தவிக்கும் வாகன ஓட்டிகள்!
06:53பழங்குடியினர் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு ! தேனியில் கம்யூனிஸ்ட் கட்சி வீதிப்போராட்டம் !
03:48தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா நிறைவு: திரளான பக்தர்கள் தரிசனம்!
01:49நம்பர் 1 டிரெண்டிங்கில் 'தக்காளி வெற்றி கழகம்' பஸ்! யார் பாத்த வேலைடா இது?
08:28நெல் சேமிப்புக் கிடங்குகள் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாததை கண்டிக்கிறோம் - பிரேமலதா பேட்டி
04:38காவிரி விவகாரம் | அனைத்து கட்சி கூட்டம் மூலம் எந்த முடிவும் எட்டப்படாது ! நிர்மல் குமார் பேட்டி
03:59பட்ஜெட் என்ற பெயரில் ஏமாற்று வேலை ! எதிர்கால திட்டமே இல்லாத பட்ஜெட் ! – நயினார் நாகேந்திரன் பேட்டி