விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!

விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!

Ansgar R |  
Published : Mar 19, 2024, 11:35 PM IST

Viruthunagar : விருதுநகரில் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட நகரின் முக்கிய பிரதான சாலையான பழைய பேருந்து நிலையம் புள்ளளக்கோட்டை சாலையில், நெடுஞ்சாலை துறையினர் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பொதுவாக புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி இரவு நேரங்களில் நடைபெறும் நிலையில், எந்தவித முன்னறிவுப்பும் இல்லாமல், அறிவிப்பு பதாகைகள் எதுவும் வைக்கப்படாமல் மாலை வேளையில் தார் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது. இந்நிலையில் மீனாம்பிகை பங்களா பகுதியில், சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்து செல்வதற்கு வழியில்லாமல் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தும் நிர்பந்தம் ஏற்பட்டது.

இதனால் சாலை பணியாளர்களுக்கும், பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாலை வேளையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலும் முறையான வழிகாட்டுதல் இல்லாமலும் சாலையை அமைத்ததால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

02:18TASMAC | இனி 'சைடு'ல காசு வாங்க முடியாது! டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றம்! குடிமகன்கள் குஷி!
02:45சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
10:24அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
02:34Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
10:09"போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!" - நயினார் நாகேந்திரன் அதிரடி ஓப்பன் டாக்! 💥
03:06தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
03:09Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!
04:04"பாஜக தலைவராக அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டார்" - பாராட்டிய திருமாவளவன்!
08:34முதலமைச்சர் விஜய் கொடுத்த 436 திட்டங்கள்" – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
08:19மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!