
சிவகங்கை நகராட்சியின் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு திட்டம் மற்றும் சுடுகாடு அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முத்துப்பட்டி, பொன்னாகுளம், அரசிணிப்பட்டி உள்ளிட்ட ஏழு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பதாகைகளை ஏந்தி சுமார் 400க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.