
நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அனைவருக்கும் நன்றி தெரிவித்த போது திருச்சியில் பல்வேறு பணிகளுக்கும், புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். அப்போது பழனியாண்டி பிரதமருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என கூறி அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி திருவேங்கடம் என்பவர் திடீரென எழுந்து பழனியாண்டி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.உடனே பழனியாண்டி யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும் உட்க்கார் என தெரிவித்தார். இதன் காரணமாக சிறிது நேரம் நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து பழனியாண்டி தன்னுடைய உரையைப் பேசி முடித்தார்.