Velmurugan s | Published: Mar 31, 2025, 3:00 PM IST
தமிழகம் முழுவதும் ரம்ஜான் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று காலை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது . இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். இஸ்லாமிய மக்கள் திருச்சியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றாக கூடி தொழுகையில் ஈடுபட்டனர்.