
நான் மகன், மகளின் தாயாக சொல்கிறேன். இங்கு சிங்ப்பூரைப் போன்ற பாதுகாப்பு கிடையாது. ஆண்களும் தேவையில்லாத நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது. நம் பாதுகாப்புக்கு நாம் தான் பொறுப்பு. நான் பேசிய கருத்துகள் பெண்ணியத்திற்கு எதிரானது என்றால் பெண்ணியமே தேவையில்லை. நன்கு படித்து பெரிய பொறுப்புகளுக்கு சென்று சாதனை செய்வதை சுதந்திரம் என்று சொல்லுங்கள் என்றார்.