பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..! குவியும் பாராட்டுகள்..

பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..! குவியும் பாராட்டுகள்..

Published : Aug 13, 2020, 02:18 PM IST

ஊரடங்கு உத்தரவு ஒருபுறம் இருக்க விவசாயத்தில் களமிறங்கிய சிறுவர்களின் செயல்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கனஜ்ஜூர் பகுதியை சேர்ந்த சோமசேகர்- லாவண்யா தம்பதியினர்.  இவர்களுக்கு 8 வயதில் ராம்சரண், 6 வயதில் மனோஜ் என்கிற 2 மகன்கள் உள்ளனர்.

சோமசேகரின் பிரதான தொழில் விவசாயம். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தன்னிடம் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். தற்போது 2 ஏக்கரில் புதினா மற்றும் கொத்தமல்லி பயிரிட்டுள்ளார். மேலும் நெல் நாற்று நடும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சோமசேகரின் மகன்கள் ஊரடங்கு காலத்தில் பள்ளி திறக்கப்படாத காரணத்தால் தனது தந்தைக்கு உதவியாக விவசாய பணிகள் செய்து வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் சிறுவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த சிறுவனின் செயல் பாராட்டும் விதமாய் அமைந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் பல பிரபலங்கள் டிக்டாக்கில் சமையல் செய்வது உடற்பயிற்சி செய்வது போன்ற பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த சிறுவர்கள் பொழுது போக்கில் ஆர்வம் காட்டாமல் தனது தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முதுகில் மருந்து தெளிப்பானை கட்டிக்கொண்டு மருந்து தெளிப்பது, களையெடுப்பது, மண்வெட்டி கொண்டு நிலங்களுக்கி நீர் பாய்ச்சுவது, நெல் நாற்று நடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர்களின் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

06:37கந்தன் மலை படத்தில், H.ராஜா-க்கு தகுதியே இல்ல - அமைச்சர் சேகர்பாபு
02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி