இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பின்பு அண்ணாமலையின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற்றப்படும் - அமைச்சர் அதிரடி

இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பின்பு அண்ணாமலையின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற்றப்படும் - அமைச்சர் அதிரடி

Published : Nov 07, 2023, 01:09 PM IST

இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பின்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பின்பு பாஜக தலைவர் அண்ணாமலையின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும். எனது ஊழல் வழக்கு குறித்து அண்ணாமலை பேசுகிறார். எனது வழக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம். ஆளுநர் மாளிகைக்குள் கருக்கா வினோத் வெடிகுண்டு வீசவில்லை. ஆளுநர் மாளிகை போகும் வழியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜகவினர். மீண்டும் அவர்களே தற்போதும் ஜாமினில் எடுத்து பெருமையை தேடிக் கொள்ளலாம். நீட்டைப் பற்றி பேசுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு, அதன் அடிப்படையில் தான் கருக்கா வினோத்தும் பேசியுள்ளார், அண்ணாமலை வேண்டுமானால் எங்களோடு சேர்ந்து நீட்டு விலக்குக்கு ஆதரவு கொடுக்கட்டும்.

ஆளுநர் மீதான வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் எவ்வாறு வாதிடுவது என்று தலைமை வழக்கறிஞரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அவ்வாறு வாதாடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

03:15சிக்கலில் 7 தமிழக அமைச்சர்கள்! லிஸ்ட் போட்ட அதிமுக! முதல்வருக்கு தலைவலி !
பெரியாரை விமர்சித்த சீமான்; உதயநிதியின் ரியாக்‌ஷன் இதுதான்!
தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்! தளபதியின் என்ட்ரி வீடியோ
ஒரே குடும்பம் தான் திமுகவின் ஒரே கொள்கை! திமுக மீது வானதிஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!
இடை தேர்தலில் போட்டியிடாமல் ஓடும் 23ம் புலிகேசி!எடப்பாடி குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்!
விஜய் பரந்தூர் வர காரணமான சிறுவன் ராகுல்?யார் இந்த ராகுல்? சிறுவன் கூறியது என்ன?|Asianet News Tamil
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!!| Asianet News Tamil
பரந்தூர் மக்களை சந்திக்க கிளம்பிய த.வெ.க. தலைவர் விஜய்!நேரடி காட்சிகள்! Asianet News tamil
அண்ணா பல்கலை விவகாரம்:பொது மக்கள் கேள்விகளை கண்டு திமுக அரசு பயப்படுகிறது-அண்ணாமலை!
சென்னை மெட்ரோவுக்கு ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை !!