அருந்ததியர் சமுதாயம் குறித்து பேசிய விவகாரம்: சீமான் உருவப்பொம்மை எரிப்பு!

Feb 20, 2023, 6:11 PM IST

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக பிரச்சாரம் மேற்கொண்ட இடத்தில், அருந்ததியர் சமுதாயம் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நெல்லை பாளையங்கோட்டை ஒண்டிவீரன் மணிமண்டம் முன்பு சீமான் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.