Annamalai : தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை; தலைவராக வந்துள்ளேன் - அண்ணாமலை விளாசல்!

Mar 7, 2023, 5:57 PM IST

விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பொய் வதந்திகளை கடந்து பாஜக வெற்றிபெறும் எனத் தெரிவித்தார்.  மறைந்த ஜெயலலிதா அம்மையாரின் முடிவு எவ்வாறு இருக்குமோ அதே போன்றுதான் என் முடிவும் இருக்கும் எனவும், இட்லி, தோசை சுடவரவில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தான் ஒரு தலைவன் என்றும் ஒரு தலைவர் போல் முடிவுகளை எடுப்பேன் யாருக்கும் பாரபட்சம் காட்டமாட்டேன் எனவும் தெரிவித்தார்.