மீண்டும் ஒரு ”தேவர் அய்யா” தமிழகத்திற்கு தேவை.. மரியாதை செலுத்திவிட்டு அண்ணாமலை கருத்து

Oct 30, 2022, 1:08 PM IST

முத்துராமலிங்க தேவரின் 115 ஜெயந்தி விழா மற்றும் 65வது குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடம் மற்று மதுரையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 அந்த வமையில் கோரிபாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,” தேவர் மறுபடியும் திரும்பி வரவேண்டிய தேவை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும் முத்துராமலிங்க தேவர் எண்ணங்களை பாஜக நிறைவேற்றும்” என்று பேசினார்.