கதறிய மக்கள்.. சூரல் மலை நிலச்சரிவின் போது பதிவான சிசிடிவி காட்சிகள்! வைரல் வீடியோ!!

Aug 19, 2024, 8:41 AM IST

ஒரே இரவில் ஒரு கிராமமே அழிந்து போன நிலச்சரிவு பேரிடரின் அதிர்ச்சியூட்டும் நேரடி காட்சிகளை ஏசியாநெட் நியூஸ் முதன்முறையாக வெளியிட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இரவில் சூரல் மலையில் நடந்த சோகத்தை காட்டும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் இப்போது வெளிவந்துள்ளது.

வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகள் ஆனது,ஆர்ப்பரித்து வரும் நீர் கடைகளில் உள்ள பொருட்களை அடித்துச் செல்வதைக் காணலாம். நிலச்சரிவு எவ்வளவு பயங்கரமானது என்பதை சுரல்மாலாவில் உள்ள கடைகளில் இருந்து சிசிடிவி காட்சிகள் நமக்கு காட்டுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் சூரல் மலையில் பலத்த மழை பெய்தது என்பதும் காட்சிகளில் இருந்து தெளிவாகிறது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.